![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Saattai Duraimurugan Arrested: ‘மீண்டும் கைதான சாட்டை துரைமுருகன்’ என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு..?
’சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் சிறைக்கு சென்றிருக்கிறார் சாட்டை துரைமுருகன்’
![Saattai Duraimurugan Arrested: ‘மீண்டும் கைதான சாட்டை துரைமுருகன்’ என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு..? Youtuber, Naam Tamilar Saattai Duraimurugan arrested again, Know here about cases registered against him Saattai Duraimurugan Arrested: ‘மீண்டும் கைதான சாட்டை துரைமுருகன்’ என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/c07693c3aa5b3a2284eb6d8845b20d46_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற கனிம வள கொள்ளைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமானோடு பங்கேற்று, சீமான் முன்னிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ‘சாட்டை’ யூடியூப் தளத்தின் துரைமுருகன் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, திருச்சியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கடைகாரரை மிரட்டியது, முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியது, உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறையில் இருந்த துரைமுருகன், சமீபத்தில் தான் வெளியே வந்தார். அவர் ஜாமீனில் வெளியே வந்தது முதலே பலரையும் விமர்சித்து தனது யூடியூப் சேனலில் பேசி வந்த நிலையில், தக்கலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்து பேசியிருந்தார்.
![Saattai Duraimurugan Arrested: ‘மீண்டும் கைதான சாட்டை துரைமுருகன்’ என்னென்ன பிரிவுகளில் வழக்கு பதிவு..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/11/8023d50deb0e03ccaacad4e07052c270_original.jpg)
இதற்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது, சமூக வலைதளங்களில் சாட்டை துரைமுருகனை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்யவேண்டும் என்று உடன்பிறப்புகள் பொங்கி எழுந்தனர். தலைமையுடன் தொடர்பில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் கவலை வேண்டாம் என்று சொல்லி கொந்தளித்துக்கொண்டவர்களை அமைதிப்படுத்தினர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்த சாட்டை துரைமுருகனை நாங்குநேரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், அங்கிருந்து பத்மநாபபுரம் கொண்டுச்செல்லப்பட்ட அவர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர்படுத்தப்பட, சாட்டை துரைமுருகனை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்
- 153 - வேண்டுமென்றே திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, செயல்படுவது
- 153A - இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வ் வகையில் பேசுவது
- 143 - சட்டவிரோதமாக அல்லது அனுமதியின்றி கூட்டம் கூட்டி பேசுவது
- 505(2) – மதங்கள் குறித்தும் வழிபாடுகள் பற்றியும் பொதுவெளியில் அவதூறு செய்வது / பேசுவது
- 506(1) – கொலை மிரட்டல், மிரட்டும் தொனியில் பேசுவது, எச்சரிப்பது
- 269 – நோய் தொற்று பரவும் வகையில் செயல்படுதல், கூட்டம் கூட்டுதல்
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது ஏன் ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)