மேலும் அறிய

‘திமுக வரம்பு மீறி தவறான ஆட்சி; கவர்னர் இருப்பது தேவைதான்’ - டிடிவி தினகரன்

திமுக வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறாக கவர்னர் இருப்பது தேவைதான் - டிடிவி தினகரன்

“நாம் எல்லோரும் அண்ணா வழியில் வந்தவர்கள். ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும். இருப்பினும் தி.மு.க., வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது மூக்கணாங்கயிறு போல கவர்னர் இருப்பது தேவை தான் என தோன்றுகிறது” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டத்தில் நடந்த திருமணம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே தொடங்கிவிட்டோம். மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழையால் பணிகளை முடிக்கவில்லை என முதல்வர், அமைச்சர் ஆகியோர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80, 85 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பர்சன்டேஜ் கணக்கு சொல்வது என்பது தான் ஞாபகம் இருக்கிறதே தவிர, பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம்.

அனைத்து ஆட்சியிலும் நிறைய செய்கிறார்கள், செய்யாமலும் விட்டு விட்டு விடுகிறார்கள். மக்களுக்கு தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பட்டிதொட்டி முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றாதீர்கள்.
 
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. இதில் தி.மு.க., அரசியல் செய்தால், மக்கள் சும்மா விடமாட்டார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிட்டு தி.மு.க., எப்படி அசிங்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். 99 சதவீத அரசியல் நோக்கர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் திருமாவளவன் இருப்பதால், தி.மு.க., போலவை பேசி வருகிறார். மதவாதத்துக்கு எதிராக பேசுவதை திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணியினர் நிறுத்தி விட்டு, மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இல்லையொன்றால் 2024ல் இதற்கான பலனை அனுபவிப்பார்கள்.

நாம் எல்லோரும் அண்ணா வழியில் வந்தவர்கள் என்பதால், ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும். இருப்பினும், தி.மு.க., வரம்பு மீறி தவறான ஆட்சி செய்யும் போது, மூக்கணாங்கயிறு போல கவர்னர் இருப்பது தேவை தான் என தோன்றுகிறது. கவர்னர் பேசுவதை பெரிதுப்படுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கவில்லை என பழிப்போடாமல். தமிழக அரசு இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.  ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.

தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியால் தான் முடியும். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும். அந்தக் கூட்டணிக்கு அமமுக நேசம் கரம் நீட்ட தயார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget