TVK Vijay Speech: நம்மைத் தவிர தில் யாருக்கு இருக்கிறது.. தவெக நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு
திமுக-வினர் செய்யும் தவறுகளை சொல்லும் தைரியம் நம்மைத் தவிர வேறு யாருக்கு உள்ளது? என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
கோட்டை என்பதே கனவு:
எம்ஜிஆரை மட்டுமல்ல, அவரது தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இதை எல்லாம் மக்கள் அமைதியாக பார்த்து, பார்த்து என்ன செய்தார்கள்? என்பது உங்களுக்கேத் தெரியும். அவர் வெற்றி பெற்ற பிறகு, இந்த அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்று சொல்வார்களே, அவர்கள் எல்லாருக்கும் கோட்டை கோட்டை என்பதே ஒரு பகல்கனவாகவே மாறிவிட்டது.
1977ம் ஆண்டு போலவே இப்பவும் அதே பழைய, அறுந்துபோன, தேய்ந்து போன, நஞ்சுப்போன பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்து எங்கேயோ சேர்ந்து விட்டது. உங்கள் டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.
அதே டப்பா:
காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. அவருக்கு இலக்கியம் என்றால் என்ன தெரியும்? அவரைப் பற்றியும் கிண்டலும், கேலியும். யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதுதான் அவர்கள் வேலையே. இப்படி அவர்கள் செய்யும் தவறுகளை நாம் எடுத்துச் சொன்னால், அவர்கள் செய்த ஊழல் எடுத்துச் சொன்னால், முக்கியமாக நாம் அதை எடுத்துச் சொன்னால் 50 வருடத்திற்கு முன்பு உருட்டிய அதே டப்பாவை உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்.
பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும். அதற்காக நாம் அவர்கள் செய்யும் தவறுகளை சொல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுவோம். சொல்லிக்கொண்டே இருப்போம். அவர்கள் செய்யம் தவறுகளைச் சொல்லும் தில் நம்மைத் தவிர யாருக்கு இருக்கிறது?
மக்களின் ஒரே பிரதிநிதி:
மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான். இந்த நிலைமையில், திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீயசக்தி பற்றி எழுதியிருந்தால்
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம்
திமுக முதற்றே உலகு
எழுதியிருப்பார்.
மும்முனைப் போட்டி, நான்குமுனைப் போட்டி என்று சொல்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக நம் அணி ஒரு பக்கம். திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். பாஜக தலைமையில் மற்றும் பலர். உண்மையைதானே சொன்னேன்.
ஏன்டா கூப்பிட்டோம்?
எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் திமுக-வை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா! ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா! இப்படி எல்லாம் கேட்கும்போது எனக்கு ஒவ்வொரு வீட்டிலும் கூப்பிடுவது போல தோன்றுகிறது.
ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜய்யும், ஒவ்வொரு விஜியும் பூத், பூத்தாக காலையிலே வந்து நிற்பாங்க. அன்று தெரியும் ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோமென? இப்படி பேசினால் உடனே சினிமாவா இது? என்று ஆரம்பித்துவிடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விடமாட்டேங்குறீங்களே?
இவ்வாறு அவர் பேசினார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















