மேலும் அறிய

வைகோ மகனை எதிர்த்து பதிவான இரு ஓட்டு... அது யார் என்பதை அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!

மதிமுகவின் தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்தமைக்கு கட்சி நிர்வாகிகளுக்கிடையே எதிர்ப்புகள் உள்ளது தெரியவருகிறது.

ம.தி.மு.கவின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதற்குக் கட்சியின் நிர்வாகிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக்கூறப்படுகிறது.

மதிமுகவின் பொதுச்செயலாளராக வைகோ தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவர். ஆனால் தற்போது உடல்நிலையைக்கருத்தில் கொண்டு  கட்சியில் சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளதால், கட்சியின் நிர்வாகிகள் வேண்டுகோளின் படி வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சியின் முக்கியப்பொறுப்பில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு வேண்டாம் என்று மறுத்தப்போதும் நிர்வாகிகள் பலரின் கோரிக்கைகளைத் தற்போது நிறைவேற்றிவுள்ளார். அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமைக்கழகமான தாயகத்தில் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரை வையாபுரிக்கு பதவி கொடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதுக்குறித்து விவாதம் நடைபெற்றது.

  • வைகோ மகனை எதிர்த்து பதிவான இரு ஓட்டு... அது யார் என்பதை அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!

குறிப்பாக கடந்த சட்டமன்றத்தேர்தலில் இருந்தே துரை வையாபுரி கட்சிக்கு வர வேண்டும் என கட்சி நிர்வாகிகள் பலர் தெரிவித்து வந்த நிலையில், கூட்டத்தில் பெரும்பாலோனார் துரை வையாபுரிக்கு ஆதரவு தெரிவித்தனர். இருந்தப்போதும் ரகசிய வாக்கெடுப்பு நடத்திய பின்பு தான் எதுக்குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துவிட்டார். மேலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாவிடில் கட்சியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என கூறினார். இதனையடுத்து, `துரை வையாபுரிக்கு அரசியலுக்கு வரலாமா, பதவி கொடுக்கலாமா?' என ஒரு தாளும், `வேண்டாம்' என ஒரு தாளும் கொடுக்கப்பட்டது. அந்தத் தாளை பூர்த்தி செய்துவிட்டு பெட்டியில் நிர்வாகிகள் போட்டனர். முடிவில், 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவு வாக்களித்துள்ளனர். ஆனால் ஆதரவு தெரிவிக்காத 2 பேர் யார் எனத் தெரியவில்லை. இருந்தப்போதும் அவர்கள் கை தவறிக்கூட வாக்களித்திருக்கலாம் என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்த ரகசிய வாக்கெடுப்புக்குறித்து மாவட்டச்செயலாளர் பேட்ரிக் பேசுகையில், மதிமுகவின் தலைமை கழக செயலாளருக்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தொடக்ககாலம் முதலே மதிமுக இயக்கத்திற்கு  துரை வரக்கூடாது என்பதில் வைகோ உறுதியாக இருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகளின் நிர்பந்தத்தின் பேரில் தான் தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தான் நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றதாகக் கூறினார்.

  • வைகோ மகனை எதிர்த்து பதிவான இரு ஓட்டு... அது யார் என்பதை அறிந்தால் அதிர்ச்சியாவீர்கள்!

மேலும் மதிமுகவின் ரகசிய வாக்கெடுப்பில் , அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோவை ஈஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், இதுக்குறித்து தற்போது எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாது என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.. இதனையெல்லாம் பார்க்கும் போது மதிமுகவின் தலைமைக்கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்தமைக்கு கட்சி நிர்வாகிகளுக்கிடையே எதிர்ப்புகள் உள்ளது தெரியவருகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிடில் நிச்சயம் பெரும் பிரச்சனைகள் வெடிக்கும் என்கின்றனர் மதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

யார் அந்த இருவர்...!

துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு வழங்க நடந்த மதிமுக நிர்வாகிகள் ஓட்டெடுப்பில், 106 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2 ஓட்டுகள் மட்டும் துரை வையாபுரிக்கு கட்சி பொறுப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளிக்கப்பட்டிருந்தது. அது யார் என்கிற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. ஒருவர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றொருவர் கோவை மாநகர மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆவர். இவர்கள் இருவர் தான் துரை வையாபுரிக்கு எதிர்ப்பு ஓட்டு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget