பெரியாருடைய கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்பட வேண்டும் -அமைச்சர் சிவசங்கர்
பாசிச பாஜக அரசு, ஒரே நாடு, ஒரே மதம், என்பதை முன்னெடுக்கின்ற இந்த வேலையில் பெரியாருடைய கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் சிந்தனையாளன் பொங்கல் மலர் 2023 வெளியிடப்பட்டது.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முத்து.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநிலங்களுக்கு மாநில அரசு அதிகாரம் வேண்டும், காவிரிப் படுகை சிறப்பு வேளாண் மண்டலம் அமைத்தல் வேண்டும், வேளாண் விளைபொருள்களுக்கு நல்ல விலை வேண்டும், காவிரி பூம்புகார் தொல்லாய்வு வேண்டும், மீனவ மக்களின் நலன் காக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Peshawar Bomb Blast: பாகிஸ்தானில் பயங்கரவாத குண்டு வெடிப்பு சம்பவம்.. பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு
அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளார்களிடம் பேசியபோது: இந்திய ஒன்றிய பாசிச பாரதிய ஜனதா கட்சி அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று முன்னெடுக்கும் இந்த வேலையில், இந்த மண்ணில் பெரியாரின் கொள்கைகள் தொடர்ந்து ஒலிக்கப்படவேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் சனா தான கொள்கைகளை எதிர்த்து சமதர்மத்தை நிலைநாட்டுவதற்கு தந்தை பெரியார் வழியிலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர், அய்யா ஆணை முத்து வழியில் இவ்விழாவில் பங்கேற்று இருப்பதாக தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசியவர், பல கொள்கைகளை வழங்கி வந்த ஆணை முத்து அவர்கள் அவர் கடந்து வாழ்ந்த பகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற படியால், அவர் ஆற்றிய பணியை வெளி உலகத்திற்கு எடுத்து செல்கின்ற இந்த பணியை, கடமையாக கருதுவதாக கூறினார்.
Erode By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... தொடங்கியது வேட்புமனு தாக்கல்..!
மேலும், “ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி அடையும். ஒரு முதல்வராக கோட்டையில் அமர்ந்து பணி செய்து விட முடியும், அவ்வாறில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று மக்களிளிடையே குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். தற்பொழுதும் களத்தில் முதலமைச்சர் என்கின்ற ஒரு பயணத்தை தொடங்கியுள்ளார். எனவே அவர் மக்களோடு முதலமைச்சராக திகழ்கிறார். அவரை குறித்து மக்கள் நன்கு அறிவார்கள்” என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets