மேலும் அறிய

திருப்பூரில் நடக்கும் இந்திய கம்யூ., மாநில மாநாடு - தஞ்சையில் வழியனுப்பு விழா

திருப்பூரில் நடக்க உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதிநிதிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.

திருப்பூரில் நடக்க உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதிநிதிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்திய நாட்டில் உழைக்கின்ற, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலை வாய்ப்பு, உணவு, நீர் உட்பட அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய உரிமைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பாஜக ஆட்சியிலும் நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது . தற்போது பாஜக அரசின் மதவாத நடவடிக்கைகளால், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் நாடு சிதறுண்டு கிடக்கிறது.

இந்நிலையில் மாற்றம் காண மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத பாஜக அரசுக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 வது மாநில மாநாடு நாளை 6ம் தேதி முதல்  7 ,8 ,9 தேதி என நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

நாளை காலை 9.30 மணி அளவில் மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு ஏற்றித் தொடக்கி வைக்கிறார். மாலை 4 மணி அளவில் நடைபெறும் சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டுக்கும் அவர் தலைமை வகிக்கிறார்.

நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா தொடக்கவுரையாற்றுகிறார். இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.என்.காதர் மொகிதீன், கொ.ம.தே.க.பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டின் 2வது நாளான ஞாயிற்றுக்கிழமை அறிக்கைகளின் மீதான விவாதமும், கருத்தரங்கமும் நடைபெறுகிறது. மாநாட்டின் 3வது நாளான திங்கள்கிழமை அறிக்கைகள் மீதான தொகுப்புரை, கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை, மாநிலக்குழு, கட்டுப்பாட்டுக்குழு தேர்வு, தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் இன்று மாலை தஞ்சாவூரில் இருந்து ஜனா சதாப்தி விரைவு ரயில் மூலம் புறப்பட்டனர். திருப்பூரில் நடைபெறும் மாநாடு வெற்றி பெறவும், பங்கேற்க செல்லும் பிரதிநிதிகளை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையில்,  வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலையில் மாவட்ட நிர்வாகிகள் சந்திரகுமார், பாலசுந்தரம், கல்யாணசுந்தரம், சக்திவேல்,  பூபேஷ் குப்தா, செந்தில்குமார், ராஜாராமன், எஸ்தர்லீமா உட்பட 16 பேர் திருப்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த வழியனுப்பு நிகழ்ச்சியில் சிபிஐ மாநகர செயலாளர் பிரபாகர், ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் மருத்துவர் சுதந்திர பாரதி, அரசு போக்குவரத்து சங்க பொருளாளர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.