மேலும் அறிய

“பொதுத் தேர்வு கூட்டாட்சிக் கொள்கையை நீட் தேர்வு மீறுகிறது”: தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஒற்றைச் சாளர பொதுத் தேர்வு கூட்டாட்சிக் கொள்கையை நீட் தேர்வு மீறுவதாகக் கூறி தமிழ்நாடு அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

நீட் தேர்வு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளிலும் சேர்க்கைக்கான மருத்துவ நுழைவுத் தேர்வாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 131வது பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநிலங்களின் சுயாட்சியைப் பறிப்பதால், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் கூட்டாட்சி கொள்கை நீட் போன்ற தேர்வுகளால் மீறப்படுவதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. 

முன்னதாக நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திர அரசு தமிழ்நாடு அரசிடம் ஏற்கெனவே விளக்கம் கேட்டிருந்தது. 

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மசோதாவானது ஆளுநரின் மூலம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. 

விளக்க கடிதம்:

அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு விளக்கம் கேட்டது. அதற்கு தமிழ்நாடு அரசும் பதிலளித்திருந்தது. 

தற்போது, மீண்டும் விளக்கம் கேட்டு ஆயுஷ் அமைச்சகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இதனை தொடர்ந்து, ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு  விளக்கம் அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Breaking News LIVE 28th Sep 2024: திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Embed widget