மேலும் அறிய

SC On Waqf Bill: மோடி அரசுக்கு சாட்டையடி - வக்பு வாரிய சட்டத்தின் அம்சங்களுக்கு தடை - உச்சநீதிமன்றம் அதிரடி

SC On Waqf Bill: மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களுக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC On Waqf Bill: வக்பு வாரியத்தின் சொத்து என அறிவிக்கப்பட்டது,  அரசாங்கத்தின் சொத்து என அங்கீகரிக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அதிரடி

மத்திய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வக்பு திருத்தச் சட்டம் 2025 இல், ஒருவர் வக்பு ஒன்றை உருவாக்க 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்பு (திருத்தம்) சட்டம், 2025 இன் முழு விதிகளையும் தடை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும், சில பிரிவுகளுக்கு சில பாதுகாப்பு தேவை என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை

மேலும், வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை ஆட்சியருக்கு வழங்கும் வக்ஃப் சட்டத்தின் ஒரு விதியையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகளை தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்றும், இது அதிகாரப் பிரிவினையை மீறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத உறுப்பினர்கள் 3 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், வக்பு கவுன்சிலில் மொத்தத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நான்கு பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்பு திருத்தச் சட்டம்:

வக்பு அமைப்பின் கீழ் ஏற்படும் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், அதனை ஒழுங்குபடுத்தும் விதமாகவும் வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படும் என இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்த்தாலும், பெரும் அமளிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதையடுத்து சட்டத்தை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் தான், மேலும் சில அம்சங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மோடி அரசுக்கு சாட்டையடி?

கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றம் வெளியிட்டு வரும் அதிரடியான தீர்ப்புகள் பலவும், மத்திய அரசுக்கு எதிராகவே அமைந்தபடி உள்ளன. உதாரணமாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறும் முறையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்தது. தொடர்ந்து, மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதித்ததும் மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தான் தற்போது, மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்தின் சில அம்சங்களுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேநேரம், உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget