மேலும் அறிய

AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

’நான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசியது உண்மை, இப்போது இருக்கும் அதிமுக தலைவர்கள் அத்தனை பேரும் சசிகலா காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே என ஓபனாக உடைத்து பேசியிருக்கிறார் அன்வர்ராஜா’

கடந்த 24ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட சச்சரவின் தாக்கம் இன்னும் அடங்காதநிலையில், மீண்டும் அந்த பிரச்னைக்கு திரிகொளுத்தியிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா.AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

கூட்டம் நடைபெறும்போதே அன்வர்ராஜாவை சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தார் என்ற தகவல் வந்த நிலையில், அப்படி நடந்தது உண்மைதான் என ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் நேர்காணலில் போட்டு உடைத்திருக்கிறார் அன்வர்ராஜா.

தான் எடப்பாடி பழனிசாமியை அவன், இவன் என ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், சிவி சண்முகம் உள்ளிட்டோர் எழுந்து சத்தம் போட்டு, நான் பேசக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம்தான் சமாதானம் செய்து வைத்தார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கும் அன்வர்ராஜா. எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார்.AnwarRaja : ’சசிகலா எப்போதுமே எங்களுக்கு சின்னம்மாதான்’ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா அதிரடி..!

அதுமட்டுமின்றி, சசிகலா எங்களுக்கு எப்போதுமே சின்னமாதான் என்றும் அதிமுகவில் இப்போது இருக்கும் அத்தனை தலைவர்களும் அவரது காலில் விழுந்து கிடந்தவர்கள்தானே எனவும் ஆவேசமாக பேட்டி அளித்துள்ள அன்வராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கும் அன்வர் ராஜா, அவர்களோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எவ்வளோ சொல்லியும் கேட்காமல் கூட்டணி போட்டதால்தான், இந்த அளவுக்கு அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது என வெடித்து பேசியிருக்கிறார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒபிஎஸ், நான் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயக்குமார் அளித்த பேட்டி, தன்னை மிகவும் வருந்த செய்தது என்றும் பேசினார் என அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சசிகலா பற்றியோ அல்லது ஒற்றைத் தலைமை குறித்து ஒருவரும் வாய்த் திறக்காமல் இருந்ததாகவும், செங்கோட்டையன் மட்டுமே வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, எண்ணிக்கையையும் 11லிருந்து 18 ஆக உயர்த்த வேண்டும் என்று பேசினார் எனவும் அன்வர்ராஜ தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், அதிமுக தலைமையை குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை தான் ஒருமையில் பேசியது உண்மைதான், சசிகலா எங்களுக்கு எப்போதும் சின்னமாதான், சிவி சண்முகம் தன்னை தாக்க முயன்று கைகளை உயர்த்தியது உண்மை, ஜெயக்குமார் குறித்து ஓபிஎஸ் வருந்தினார் என இந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார் அன்வர்ராஜா. தொடர்ந்து இப்படி அன்வர்ராஜா வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசிவருவதால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைமை அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கின்றார்கள் விவரம் அறிந்தவர்கள்

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
"கூட்டணியில் இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டுவோம்" - நீட் விவகாரத்தில் தமிழக அரசை சாடிய விசிக விஜயரங்கன்!

வீடியோ

அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget