மேலும் அறிய

சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம் - கிழக்கு ஒன்றிய செயலாளர் போர்கொடி

’’ஜெயலலிதா குடியிருந்த கொடநாடு எஸ்டேட்டை கோயிலாகக் கருதி வருகிறோம். அந்த இடத்தில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. அந்த விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் இளங்கோவன் உள்ளார் என கூறப்படுகிறது’’

சேலம் மாவட்டத்தில் நடந்த அதிமுக உட்கட்சித் தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி செய்யப்பட்ட நிலையில், சில தினங்களில் அப்பதவிக்கு நெருங்கிய நண்பரான இளங்கோவனை ஈபிஎஸ் வழங்கி இருந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொடநாடு விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் உள்ள இளங்கோவனை மாவட்ட செயலாளராக நியமித்து ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அதிமுகவை அழித்து வருபவர். நான் கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து சேலம் ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவியில் இருந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஓமலூர் அலுவலகத்தில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென இளங்கோவன் சேலம் புறநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பு எங்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது. சேலம் மாவட்ட அதிமுகவையே அழிவு பாதைக்கு கொண்டு செல்பவர் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி அவரிடம் மிகுந்த நெருக்கமாக இருப்பதைப் போல எங்களை போன்ற காட்சிகளிடம் அவர் காட்டிக் கொள்கிறார். 

சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம் - கிழக்கு ஒன்றிய செயலாளர் போர்கொடி

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இளங்கோவன் இருந்தால் அவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட முடியாது. ஆனால் கட்சியில் இருந்து விலக மாட்டேன். அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளேன் என்றார். அதிமுக தலைமை வேறு யாருக்காவது புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுத்திருக்கவேண்டும், இவருக்கு கொடுக்கக் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்டது தவறானது. தலைமை செய்தது தவறு. சிந்தித்து பொறுப்பு வழங்கியிருக்க வேண்டும். நான் மட்டுமல்ல மற்ற ஒன்றியத்தில் உள்ள பொறுப்பாளர்களின் எண்ணங்கள் என்னை விட மிகவும் மோசமாக உள்ளது. ஜெயலலிதா குடியிருந்த கொடநாடு எஸ்டேட்டை கோயிலாகக் கருதி வருகிறோம். அந்த இடத்தில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. அந்த விவகாரத்தில் விசாரணை வளையத்துக்குள் இளங்கோவன் உள்ளார் என கூறப்படுகிறது.  

சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமனம் - கிழக்கு ஒன்றிய செயலாளர் போர்கொடி

அதனால் அதிலிருந்து அவர் நிரபராதி என நிரூபிக்கும் வரை, அவருக்கு மாவட்ட செயலாளர் பதவியை தரக்கூடாது. பெரும்பாலான ஒன்றியச் செயலாளர்கள் என்னை போன்ற மன நிலையிலேயே உள்ளனர். இளங்கோவனால் அதிமுக நிர்வாகிகள் பலர் பொருளாதார ரீதியில் நலிவடைந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். முதலில் நான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளேன் இதனால் அனைத்து நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். அதிமுக கட்சி வளரவேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் என்னுடைய ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். தொடர்ந்து தொண்டனாகவே இருப்பேன். சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமித்து இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதே போல தான் பல நிர்வாகிகளும் கருதுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget