மேலும் அறிய

பிரதமருக்கு காதுகளாகவும் கண்களாகவும் இருப்பவர்.. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்.. யார் இந்த கே.கே?

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட கே. கைலாசநாதன், குஜராத் முதல்வர் அலுவலகத்தில் அதிகார மையமாக திகழ்ந்தவர். பிரதமர் மோடிக்கு காதுகளாகவும் கண்களாகவும் விளங்கியவர்.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்தவர் கிரண் பேடி. அதற்கு பிறகு, புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. கைலாசநாதன், புதிய துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மோடிக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருக்கும் கே.கே:

குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் (சிஎம்ஓ) தலைமை முதன்மைச் செயலாளராக இருந்த கே. கைலாசநாதன், கடந்த மாதம், தானாக முன்வந்து ஓய்வு பெற்றார். 45 ஆண்டுகளாக குஜராத் அரசில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர்.

குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அதிகார மையமாக திகழ்ந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி, பிரதமரானதை தொடர்ந்து, குஜராத்தில் மோடியின் காதுகளாகவும் கண்களாகவும் இருந்தவர் கே. கைலாசநாதன். சூப்பர் சிஎம் என சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றவராக இருந்தார்.

தனக்காகவே உருவாக்கப்பட்ட தலைமை முதன்மை செயலாளர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தபோது, அவருக்கு மத்திய அரசில் முக்கிய பதவி வழங்கப்படும் என பேசப்பட்டது. குறிப்பாக, ஆளுநர் பதவியோ அல்லது துணை நிலை ஆளுநர் பதவியோ வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

குஜராத்தின் 'சூப்பர் சிஎம்': கேரள மாநிலத்தை சேர்ந்த கே. கைலாசநாதன், சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுகலை பட்டம் பெற்றவர். 1979 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கைலாசநாதன், முதல்முறையாக சுரேந்திரநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார்.

பின்னர், சூரத் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டார். குஜராத்தின் கிராமப்புற மேம்பாடு, தொழில்துறை, குஜராத் கடல்சார் வாரியம், நர்மதா வாரியம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1994 முதல் 1995ஆம் ஆண்டு வரை, குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தார் கைலாசநாதன். 1999 மற்றும் 2001 க்கு இடையில், அகமதாபாத் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்தார். பின்னர், 2006ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget