மேலும் அறிய

பிரதமருக்கு காதுகளாகவும் கண்களாகவும் இருப்பவர்.. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்.. யார் இந்த கே.கே?

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட கே. கைலாசநாதன், குஜராத் முதல்வர் அலுவலகத்தில் அதிகார மையமாக திகழ்ந்தவர். பிரதமர் மோடிக்கு காதுகளாகவும் கண்களாகவும் விளங்கியவர்.

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்தவர் கிரண் பேடி. அதற்கு பிறகு, புதுச்சேரிக்கு முழு நேர துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே. கைலாசநாதன், புதிய துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீப காலமாக, இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அங்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மோடிக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருக்கும் கே.கே:

குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் (சிஎம்ஓ) தலைமை முதன்மைச் செயலாளராக இருந்த கே. கைலாசநாதன், கடந்த மாதம், தானாக முன்வந்து ஓய்வு பெற்றார். 45 ஆண்டுகளாக குஜராத் அரசில் பல்வேறு முக்கிய பதவிகளில் இருந்தவர்.

குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்தபோது, அதிகார மையமாக திகழ்ந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி, பிரதமரானதை தொடர்ந்து, குஜராத்தில் மோடியின் காதுகளாகவும் கண்களாகவும் இருந்தவர் கே. கைலாசநாதன். சூப்பர் சிஎம் என சொல்லும் அளவுக்கு அதிகாரம் பெற்றவராக இருந்தார்.

தனக்காகவே உருவாக்கப்பட்ட தலைமை முதன்மை செயலாளர் பதவியை கடந்த மாதம் ராஜினாமா செய்தபோது, அவருக்கு மத்திய அரசில் முக்கிய பதவி வழங்கப்படும் என பேசப்பட்டது. குறிப்பாக, ஆளுநர் பதவியோ அல்லது துணை நிலை ஆளுநர் பதவியோ வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

குஜராத்தின் 'சூப்பர் சிஎம்': கேரள மாநிலத்தை சேர்ந்த கே. கைலாசநாதன், சென்னை பல்கலைக்கழகத்தில் வேதியியல் முதுகலை பட்டம் பெற்றவர். 1979 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கைலாசநாதன், முதல்முறையாக சுரேந்திரநகர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார்.

பின்னர், சூரத் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டார். குஜராத்தின் கிராமப்புற மேம்பாடு, தொழில்துறை, குஜராத் கடல்சார் வாரியம், நர்மதா வாரியம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

1994 முதல் 1995ஆம் ஆண்டு வரை, குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தார் கைலாசநாதன். 1999 மற்றும் 2001 க்கு இடையில், அகமதாபாத் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்தார். பின்னர், 2006ஆம் ஆண்டு, குஜராத் முதலமைச்சர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget