மேலும் அறிய

கைதி எண். 2529... ஜெயலலிதா கைதான நாள்: இன்றுடன் 25 வருடங்கள் நிறைவு!

போயஸ் கார்டனை சுற்றியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட கலர் டிவி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். கலர் டிவி ஊழல், டான்சி நில பேரம் உள்ளிட்ட ஏழு வழக்குகள் போடப்பட்டிருந்தன. ஜெயலலிதாவின் அமைச்சரவை சகாக்கள் தொடங்கி சசிகலா வரை பலரும் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். ஜெயலலிதா மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று தமாகா உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தன. அதனால் எந்த நிமிடத்திலும் ஜெயலலிதா கைது செய்யப்படக்கூடும் என்ற சூழல் நிலவியது. அதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா ஏழு வழக்குகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார்.

 

அந்த மனு நிராகரிக்கப்படவே, ஏழு வழக்குகளுக்கும் தனித்தனியே முன்ஜாமீன் கோரினார். அந்த ஏழு மனுக்களையும் நீதிபதி சிவப்பா பாரபட்சம் இன்றி தள்ளுபடி செய்யவே, ஜெயலலிதாவைக் கைது செய்யத் தயாரானது திமுக அரசு. உரிய உத்தரவுகள் வெளியாகின. ஜெயலலிதா கைது செய்யப்பட்டால் ஏற்படப்போகும் சட்டம் ஒழுங்குப் பிரச்னையைக் கையாளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலையிலேயே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. பின்னர் அரஸ்ட் வாரண்டை எடுத்துக் கொண்டு வீட்டின் உள்ளே காவல் துறை உயரதிகாரிகள் நுழைந்தனர். இதையடுத்து பூஜையை முடித்துவிட்டு வருவதாக ஜெயலலிதா கூறியிருந்தார். அது வரை வீட்டு வளாகத்தில் போலீஸார் காத்திருந்தனர். இதையடுத்து ஜெயலலிதா பூஜை செய்துவிட்டு காலை சிற்றுண்டியை சாப்பிட்டு தேவையான துணிகளை பெட்டியில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். 

 

அப்போது ஜெயலலிதாவை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது போயஸ் கார்டனை சுற்றியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து கோஷமிட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறிவிட்டு தொண்டர்களுக்கு கை அசைத்துவிட்டு காவல் துறை வாகனத்தில் ஏறி புறப்பட்டார். நேராக நீதிபதி ஏ.ராமமூர்த்தியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜெயலலிதா. வழக்கு, கைது விவரங்களைப் பார்த்துவிட்டு, ஜெயலலிதாவை சென்னை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி ராமமூர்த்தி. அப்போது நீதிபதியிடம் பேசிய ஜெயலலிதா, “குண்டர் சட்டம், தடா சட்டம் உள்ளிட்ட சட்டங்களின்கீழ் பலரைக் கைதுசெய்வதற்கான உத்தரவில் தான் முதலமைச்சராக இருந்தபோது கையெழுத்திட்டிருப்பதால், சிறையிலிருக்கும் நபர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும்” என்றார்.

அதைக் கேட்ட நீதிபதி ராமமூர்த்தி, சிறையில் ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பைத் தரும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட கைதி எண்: 2529. மொத்தம் 28 நாட்களுக்கு நீடித்தது ஜெயலலிதாவின் முதல் சிறைவாசம். அந்தச் சம்பவம் நிகழ்ந்து இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன! அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி சிவப்பா அதிரடியாக ஜாமீன் வழங்கும் அமர்விலிருந்து மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ஜாமீன் வழங்கும் பெஞ்சுக்கு புதிய நீதிபதியாக ஜி.ரங்கசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஏ.சாமி எடுத்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு அனுதாப அலை வீசத் தொடங்கியதை உணர்ந்த திமுக அரசு ஜெயலலிதாவின் ஜாமீன் கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு நீதிபதி ஜி.ரங்கசாமி ஜாமீன் வழங்கினார். மொத்தம் 28 நாட்கள் ஜெயலலிதா சிறையில் இருந்தார். இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிகழ்ந்த போதிலும் தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிபெருக்குடன் அதை இன்றும் நினைத்து பார்த்து மனம் வருந்துகிறார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
Crime:
Crime: "எனக்கு அவன் தான் வேணும்" 3 குழந்தைகளை கொன்று எரித்து புதைத்த தாய்.. தகாத உறவால் கொடூரம்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Embed widget