மேலும் அறிய

Ramadoss: போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பரபரப்பு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு இதுவரை பார்த்திராத போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாடு மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூடினோம். இப்போது மீண்டும் கூடுகிறோம். குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் என்று சொல்வார்கள். மகாமகம் அப்படி நடக்கும். மாவீரன் குரு இருந்தால் தொடர்ந்து இந்த மாநாட்டை தொடர்ந்த இந்த மாநாட்டை நடத்தியிருப்பார்.

அவர் இல்லை என்ற ஏக்கத்துடன் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். முழு ஒத்துழைப்பு கொடுத்த அரசுக்கும், காவல்துறைக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர கொடுக்குற மாதிரி இல்லை. அதனால் போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். 

நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. இந்த போராட்டத்திற்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.

45 ஆண்டுகாலமாக உங்களுக்காக இந்த மக்களுக்காக எல்லா சமுதாய மக்களுக்காக 324 சமுதாயங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அத்தனை சமுதாய மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்து வருபவன் ராமதாஸ். இந்தியாவிலே ஜெயபாஸ்கர் எழுதி புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார். இதுவரை ஒரு மனிதர் கண்டதுண்டா? என்று எழுதியிருப்பார்கள். நானும் இப்போது கேட்கிறேன். 

34 வகையான அமைப்புகள், போராட்டங்கள், இட ஒதுக்கீடு போராட்ங்கள், சமூக நீதி போராட்டங்கள் இந்தியாவில் வேறு யாரும் செய்திருக்கிறார்களா? என்னைப் போல யாரும் இல்லை. ஆனால், நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் வெளிச்சம் போட்டு காட்ட யாரும் இல்லை. என்னைப் போன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய மக்களுக்கு உழைத்த ஒரு தலைவர் கண்டதுண்டா? என்று புஷ்பவனம் குப்புசாமி பாடினாரே.. இந்தியாவில் யாருமே இல்லை. இதை நான் பெருமையாக சொல்ல தயாராக இருக்கிறேன். 

45, 50 ஆண்டுகள் உங்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். 95 ஆயிரம் கிராமங்கள் தமிழ்நாடு முழுவதும் என் கால் படாத கிராமங்களே இல்லை. ஓடி ஓடி உழைத்தேன். குடும்பத்தை மறைத்தேன். 5 நாள் சம்பாதித்து 3 ரூபாய்க்கு ஊசி போட்டு வீட்டிற்கு கொடுத்துவிட்டு, ஊர் ஊராக சென்று சாப்பாடு இல்லாமல் இரவு பகலாக இந்த மக்களுக்காக பாடுபட்டேன். பாடுபடுகிறேன். ஆனாலும் இந்த மக்கள் நன்றியுள்ள மக்கள். 

நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று என் பேச்சை கேளுங்கள். நான் ஆளப்போவதும் இல்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால் நான் ஆளுநராக இருந்திருப்பேன், இந்தியாவிலே பல முறை அமைச்சராக இருந்திருப்பேன், தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். அனைத்தையும் செய்திருப்பேன். எனக்கு அந்த ஆசை இல்லை. மக்களுக்காக வாழ்ந்தேன். உங்களுக்காக வாழப்போகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget