Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது தேவைக்காக கூட்டணி வைப்பவர்கள் சொல்லும் கூத்து என்று சீமான் விஜய்யை விமர்சித்துள்ளார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசினார். அப்போது, அவர் ஏராளமான விவகாரங்கள் குறித்து பேசினார். அதில் அவர் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறினார்.
விஜய் பேசியதற்கு சீமான் பதில்:
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, நமக்கு முன்னாடி இருந்த தலைவர்களே இதைச் சொன்னதுதான். அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. நான் எப்படி பார்க்கிறேன் என்றால் கொள்கை முரண், கருத்து முரண், அரசியல் நிலைபாடு வேறு. மனித உறவுகள் வேறு. வெறுப்புகள் வேறு.
நீங்கள் பா.ஜ.க,, காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க.வில் இருக்கலாம். ஆனால், இங்கு உறவு அப்படி என்பது இல்லாமல் போயிடாது. ஆனால், இங்கு எப்படி என்றால் அரசியலுக்காக மனித வெறுப்புகளை வளர்த்துக் கொள்வதுதான் இங்கு அநாகரீகமாக இருக்கிறது. நம் மாநிலத்தில்தான் அதிகமாக இருக்கிறது.
தேவைக்கு ஏற்ப பேசுறது:
வெவ்வேறு மாநிலத்தில் இருந்தால் கூட, வெவ்வேறு அரசியல் கட்சியில் இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம், வட மாநிலத்தில் எல்லாம் இருக்கிறது. நம்மிடம் அது இல்லை. அதனால், நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்பது எல்லாம் தேவைக்கு ஏற்ப கூட்டணி வைக்கிறார்கள் அல்லவா? அவங்க சொல்ற கூத்து. இது அவங்க சொல்றது.
என்ன மாற்றம் வரும்?
விகிதாச்சார அடிப்படையில் நாங்கள் வெற்றி கேட்கிறோம். நான் 36 லட்சம் தொகுதிகள் வாக்கு வாங்கியிருக்கிறேன். எனக்கு குறைந்தது 4 தொகுதி தர வேண்டும். வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நீங்க அப்படி பிரியுங்கள். நீங்கள் மக்கள்தொகை அடிப்படையில் எங்களுக்கான தொகுதி விகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
தொகுதியை இப்போது சீரமைப்பதால் என்ன மாறுதல் வரும்? தேர்தல் முறையில் நிறைய மாறுதல் தேவைப்படுகிறது. நான் கேட்பது 6 தொகுதிக்கு 1 பாராளுமன்றம் என்பதை மாற்றி, 3 தொகுதிக்கு 1 பாராளுமன்றம் என்று நான் சொல்கிறேன். இப்போது நான் மீனவன் என்றால் எனக்காக நீங்கள் பேசுவதை காட்டிலும் நானே பேசுவேன். அதுதான் மாறுதலை, வளர்ச்சியை உருவாக்கும். இருப்பதை சீரமைப்பது சரியல்ல,
எல்லாருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம் என்பதே வளர்ச்சியை நோக்கி போகுமே தவிர தொகுதியை மாற்றுவதால் என்ன வளர்ச்சி வரும்? அப்படி என்றால் வந்தபோதே செய்திருக்கலாம்? ஒரே நாடு ஒரே தேர்தல்னால என்ன செலவு மிச்சமாகும்? இது வேலையில்லாத வேலை.
இவ்வாறு அவர் பேசினார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

