மேலும் அறிய

அடுக்குமாடி இருக்கு.. ஆனா யூஸ் பண்ண முடில.. சேலத்தில் அமைச்சர் ஆய்வு! அடுத்த திட்டம் இதுதான்!!

சேலம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு வீட்டுவசதித் துறை குடியிருப்பினை அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார்.

தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி, ஏற்காடு சாலை, அய்யன் திருமாளிகை மற்றும் அரசு அலுவலர்கள் வாடகை குடியிருப்பு பகுதிகளில் உள்ள அரசு வீட்டுவசதித் துறை குடியிருப்புகளை ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த அரசு வீட்டுவசதி குடியிருக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

அடுக்குமாடி இருக்கு.. ஆனா யூஸ் பண்ண முடில.. சேலத்தில் அமைச்சர் ஆய்வு! அடுத்த திட்டம் இதுதான்!!

இதன்பின் செய்தியாளரை சந்தித்த தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று காலை சங்ககிரி அரசு வீட்டுவசதித்துறை கட்டிடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மக்கள் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான அதிகாரிகளிடம் மக்கள் அளித்த கோரிக்கைகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழக அரசு வீட்டுவசதி துறையில் மிகப்பெரிய திட்டங்களை வகுத்து வருவதாக கூறிய அவர், வீட்டுவசதி துறையின் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை புதிய செயல் திட்டங்களில் மூலம் நடத்தப்பட உள்ளது என்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் அய்யன் திருமாளிகையில் 114 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் 114 வீடுகளும் மக்கள் குடியிருக்க முன்வராததால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை அரசு விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இது மட்டுமின்றி அரசு குடிசை மாற்று வாரியம் வீடுகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 658 வீடுகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை பயனுள்ளதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பிற்கு பின்புறம் உள்ள வீட்டு வசதித்துறை குடியிருப்புகளை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார். 

அடுக்குமாடி இருக்கு.. ஆனா யூஸ் பண்ண முடில.. சேலத்தில் அமைச்சர் ஆய்வு! அடுத்த திட்டம் இதுதான்!!

சேலம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் ஆலோசனையின்படி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் சேலம் நகர பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு வீட்டுவசதித் துறை குடியிருப்பினை அங்குள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று கூறினார். அரசு குடியிருப்புகளில் வாடகையை உயர்த்தியதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அரசின் விதிமுறைகளின்படி வாடகை வசூலிக்கப்படுகிறது என்றார். நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget