மேலும் அறிய

Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்ணனும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, பதவி விலகல் கடிதத்தை தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சவிடம் கொடுத்துள்ளார். அவர் கடிதத்தை ஏற்றாரா என்ற தகவல்கள் வெளியாகாத நிலையில், பிரதமரின் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல கொழும்பு பகுதியில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது இலங்கை முழுவதிலுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் கூட்டங்களில், அதிபருக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக இலங்கையில் பொருளாதார அவசர நிலையால், நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன. 


Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

வெடித்த வன்முறை

முன்னதாக இன்று (மே 9) காலை எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் இணைந்து இலங்கை நாடாளுமன்றம் முன்பாக பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே மக்கள் மீதான தடியடிக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்கியது தவறு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

’இடைக்கால அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது’ என்று சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே மகிந்த ராஜபக்சே தன்னுடைய கட்சியில் இருந்தே ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்துத் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இலங்கை எம்.பி. சுமந்திரன், ’’வன்முறையைத் தூண்டியதற்காகப் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும். மகிந்த ராஜபக்சே சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். 

1 மாத காலத்துக்கும் மேலாக அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதற்காகவே அவர் கைது செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு நின்றுவிடாது. உடனடியாக அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இடைக்கால அரசு இனி சரிவராது. இன்று நடந்த கலவர நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, இடைக்கால அரசு ஒத்துவராது. அண்ணன் - தம்பி இருவரும் பதவி விலகிய பிறகு காபந்து அரசு நிறுவப்பட வேண்டும். தேவைப்பட்டால் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும்’’ என்று இலங்கை எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார், 

பொருளாதார அவசர நிலையில், இடைக்கால அரசு அமைந்தால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது நினைவுகூரத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget