மேலும் அறிய

Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்ணனும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதை அடுத்து, பதவி விலகல் கடிதத்தை தம்பியும் அதிபருமான கோத்தபய ராஜபக்சவிடம் கொடுத்துள்ளார். அவர் கடிதத்தை ஏற்றாரா என்ற தகவல்கள் வெளியாகாத நிலையில், பிரதமரின் ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல கொழும்பு பகுதியில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது இலங்கை முழுவதிலுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் கூட்டங்களில், அதிபருக்கான அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக இலங்கையில் பொருளாதார அவசர நிலையால், நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வந்தன. 


Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

வெடித்த வன்முறை

முன்னதாக இன்று (மே 9) காலை எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டக்காரர்கள் இணைந்து இலங்கை நாடாளுமன்றம் முன்பாக பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தைக் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதற்கிடையே மக்கள் மீதான தடியடிக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்கியது தவறு என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே இன்று (மே 9) பதவி விலகினார். சர்வதேச அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Mahinda Rajapaksa Resigns: பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா- இலங்கையில் அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

நாளை அல்லது நாளை மறுநாள் இடைக்கால அரசை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு ஆதரவு அளிக்கவில்லை.

’இடைக்கால அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம். ஆனால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது’ என்று சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே மகிந்த ராஜபக்சே தன்னுடைய கட்சியில் இருந்தே ஒருவரைப் பிரதமராக நியமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்துத் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இலங்கை எம்.பி. சுமந்திரன், ’’வன்முறையைத் தூண்டியதற்காகப் பிரதமர் கைது செய்யப்பட வேண்டும். மகிந்த ராஜபக்சே சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். 

1 மாத காலத்துக்கும் மேலாக அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதற்காகவே அவர் கைது செய்யப்பட வேண்டும். இந்தப் போராட்டம் இதோடு நின்றுவிடாது. உடனடியாக அதிபர் கோத்தபய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும்.

இடைக்கால அரசு இனி சரிவராது. இன்று நடந்த கலவர நிகழ்ச்சிகளை வைத்துப் பார்க்கும்போது, இடைக்கால அரசு ஒத்துவராது. அண்ணன் - தம்பி இருவரும் பதவி விலகிய பிறகு காபந்து அரசு நிறுவப்பட வேண்டும். தேவைப்பட்டால் தேர்தலை நோக்கிச் செல்ல வேண்டும்’’ என்று இலங்கை எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார், 

பொருளாதார அவசர நிலையில், இடைக்கால அரசு அமைந்தால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது நினைவுகூரத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
Embed widget