மேலும் அறிய

'என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை' - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஆன்மீக நிகழ்ச்சி அழைப்பை ஏற்று ஆளுநர் வரும்பொழுது போராட்டங்களை தவிர்ப்பது நல்லது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ”ஆன்மீகமும் தமிழும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் இன்னும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும், தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தம் இல்லை என சில பேர் கொள்கை ரீதியாக பேசி வருகிறார்கள். அது தவறு என மக்கள் தங்கள் நடவடிக்கையில் நிரூபித்துக் கொண்டு வருகிறார்கள். தமிழோடு சேர்ந்து ஆன்மீகம் தழைக்கும், தமிழும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்ற எண்ணம் இன்னும் அதிகமாக விதைக்கப்பட வேண்டும்” என்றார்.


என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை'  - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த முறை தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தபோதும், மீண்டும் தற்போது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் கும்பாபிஷே விழாவிற்கு வருகை புரிந்த போதும் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? ஆளுநர் அவரது கருத்தை சொல்கிறார். கருப்புக் கொடி காண்பிப்பது தவறு எல்லோருக்கும் தமிழகத்தில் சென்று வருவதற்கு உரிமை உள்ளது, அவரவர்கள் கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது. ஆன்மீக நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்று வரும்பொழுது இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது என்றார்.

CM Stalin Letter: ‘அமுல் நிறுவனத்தை தடுத்து நிறுத்துங்க’ : அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

தொடர்ந்து புதுச்சேரி மற்றும் தமிழக ஆளுநர்கள் வெளியேற வேண்டும் என போராட்டங்கள் நடைபெறுவது குறித்த கேள்விக்கு? எல்லா ஆளுநர்களும் வெளியேறி விட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சிய என கேள்வி எழுப்பியவர்,  புதுச்சேரி ஆளுநர் வெளியேற வேண்டும் என்ற சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை கொரோனா நேரத்தில் தான் தூங்கி இருப்பேனா என்று கூட தெரியவில்லை, அந்த அளவிற்கு புதுச்சேரி மக்களுக்காக  சேவையற்றி உள்ளேன். டெல்லி உச்சநீதிமன்றம் தெரிவித்த பிறகு எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சொல்கிறார்கள், புதுச்சேரி நாராயணசாமி அதிகார வெறிபிடித்து அலைகிறேன் என்று என்னை கூறுகிறார். எனக்கு எங்கேயுமே வெறி பிடிக்கவில்லை என சிரித்தபடி தெரிவித்தார். 


என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை'  - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், என்னை எதிர்த்து போராடுபவர்களுக்கெல்லாம் என்னிடம் சுமூகமான உறவு உள்ளது ஓராண்டுகளில் 1500 கோப்புகளை சரி செய்துள்ளேன் 17  கோப்புகளுக்கு சந்தேகங்களை எழுப்பி உள்ளேன் குழந்தைகளுக்கு லேப்டாப், மருத்துவமனையை மேம்படுத்துவது, மற்றும் 2000 ரூபாய் பணம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்திலும் முதலமைச்சர் என்ன நினைக்கிறாரோ அதற்கு நான் ஒப்புதல் அளித்துள்ளேன். தான்தோன்றித்தனமாக முதலமைச்சரையும், அமைச்சரையும் ஒதுக்கிவிட்டு ஆளுநர் கையில் அதிகாரத்தை எடுத்துள்ளார்  என்பதை முற்றிலும் நான் மறுக்கிறேன். எனவே என்னை எதிர்ப்பவர்களை பற்றி கொஞ்சம் கூட நான் கவலைப்படவில்லை எனது பணியில் கொஞ்சம் கூட சுயநலம் இல்லை புதுச்சேரி நாராயணசாமி கூறுகிறார், ஆளுநர் எப்போதும் இங்கேயே உள்ளார் என்று, நான் இங்கேயே இருப்பது குறித்து அவர் சந்தோஷப்பட வேண்டும் எனவே என்னை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்பது என்னுடைய கருத்து என தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget