மேலும் அறிய

"இந்தி நமக்கு என்ன செய்யும்? நம்மைச் சூத்திரர்களாக மாற்றும்” : எம்.பி., டி.கே.எஸ் இளங்கோவன்

இந்தியை அனுமதித்தால் நாம் அடிமைகளாக சூத்திரராக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு என்று திமுக எம்பி டிகேஎஸ்.இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியை அனுமதித்தால் நாம் அடிமைகளாக சூத்திரராக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு என்று திமுக எம்பி டிகேஎஸ்.இளங்கோவன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தி தேசிய மொழியா இல்லையா என்பது பற்றிய விவாதம் எழுந்து சற்றே அடங்கிய நிலையில் மீண்டும் இந்தி தொடர்பாக கருத்து தெரிவித்து அடங்கிய புயலை மீண்டும் கிளப்பியிருக்கிறார் திமுக மாநிலங்களவை எம்பி டிகேஎஸ் இளங்கோவன். 

இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு:

சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாடு நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் திமுக எம்.பி டிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.

”அமித்ஷா இந்தியரா?”:

அப்போது பேசிய டிகேஎஸ் இளங்கோவன், ஒரே மொழியாக இந்தி இருந்தால்  உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று அமித்ஷா பேசியிருக்கிறார். ஆனால் எனக்கு சந்தேகம் என்னவென்றால் அவர் இந்தியரா என்பதே எனக்கு சந்தேகமாகியிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் அடையாளப்படுத்துவது வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான்.


நமக்கு வேறுபட்ட பண்பாடுகள், மொழிகள் இருக்கின்றன. இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கிறோமே அது தான் உலக அளவில் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. 1947 வரை இந்தியா ஒரு நாடே இல்லை. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. மொழி வழி மாநிலங்கள் இருக்கிறது. அதே போல வடமொழிக்கென்று ஒரு மாநிலத்தை உருவாக்கிப்பாருங்கள். மனு தர்மத்தை இங்கே புகுத்துவதற்காக இந்தியை திணிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.இந்தி என்ன செய்யும்.. இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும். இந்தி எந்த நன்மையும் நமக்கு செய்யாது என்றார்.


வளர்ச்சியடைந்த இந்தி பேசாத மாநிலங்கள்:

மேலும், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா,மராட்டியம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப் இவைகள் எல்லாம் வளர்ந்த மாநிலங்களா இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், ஏனென்றால் அந்த மாநிலங்களில் இந்தி தாய் மொழி இல்லை என்று கூறினார்.

வளர்ச்சியடையாத இந்தி பேசும் மாநிலங்கள்:

மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், புதிதாகப் பிரிந்த இரண்டு மூன்று மாநிலங்களில் இந்தி பேசுகின்றனர். எதற்காக நான் இந்தி படிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், நாம் மனிதர்களாக இருக்கும் வரை இதை அனுமதிக்கக்கூடாது. இதை அனுமதித்தால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம்.  அடிமைகளாக சூத்திரர்களாக இருப்போம். இந்தி வந்தால் நமக்குக் கேடு.நம்முடைய பெருமைகள் கெடும் நம்முடைய மரியாதை போகும் என்றார்.

”சூத்திரர் ஆக்கப்படுவோம்:”

நான் அந்த மொழியைப் பற்றி மட்டுமே எனது கருத்தைத் தெரிவித்தேன். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு இந்தி மொழி உதவவில்லை. நான் நானாக எதுவும் கூறவில்லை. நம்மிடம் இருக்கும் தரவுகளை வைத்தே நான் இப்படிக் கூறினேன் என்ற அவர்,  வட இந்தியாவில் மனுதர்மம் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் எப்படி சூத்திரர்கள் ஆக்கப்பட்டனரோ, அதேபோல இந்தி மொழி திணிக்கப்பட்டால், அடுத்து அந்த கலாசாரமும் திணிக்கப்படும். மொழியை நம் மீது திணித்தால், அது கலாச்சாரத்தைத் திணிக்கும் ஒரு முயற்சி. அதன் பின்னர் நாமும் சூத்திரர்களாக ஆக்கப்படுவோம் என்று இளங்கோவன் பேசினார்.

 

வைகோ பேச்சு:

பின்னர் பேசிய மதிமுக தலைவர் வைகோ, தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துவிடலாம் என அமித் ஷாக்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் இந்தித் திணிப்பை அழிப்போம் என்றார்.

தலைப்பு செய்திகள்

MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget