மேலும் அறிய

Jayakumar ADMK: வீர தீர சூர வசனங்களும் ஃபோட்டோ ஷூட்டும்தான்.. முதலமைச்சரை விமர்சிக்கும் ஜெயக்குமார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து சமகால அரசியல் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். 

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து சமகால அரசியல் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். 

அதில் அவர் பேசியதாவது, ”சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார். மேற்கொண்டு பேசிய அவர்,

“அரசுக்கு வருவாய் வரக்கூடிய வழிமுறைகளை விட்டுவிட்டு ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாற்றி கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனால்தான் 15 நாட்களில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்பது அவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டும். அதே வகையில் இன்றைக்கு திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகைக்கு பணம் தேவை என்பதால், ஒரு காவல் நிலையத்துக்கும் மக்களிடம் மாதம் 25 லட்சம் அபராதம் என்ற பெயரில் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என பத்திரிகைச் செய்தி வந்துள்ளது. காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து குற்றத்தை தடுக்கும் பணியில் கவனம் செலுத்த முடியாமல், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடத்தில் அபராதம் வசூல் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. 

புத்தி தேவையா?

மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் பொருளாதார வல்லுநர் குழு அமைப்போம் என்றார். அந்த குழுவால் அரசுக்கு வருவாயை அதிகரிக்க ஆலோசனை கூறினார்களா? என்றால், அப்படி ஆலோசனை கூறவில்லையே. அப்படி ஆலோசனை கூறியிருந்தால், பால் விலை, சொத்து வரியை அதிகரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும், வாகனத்திற்கான வரியை ஏற்றவேண்டிய அவசியம் இல்லை. கண்மூடித்தனமாக வரி ஏற்றப்பட்டுள்ளது. வரியை ஏற்றி விட்டு வல்லமை பெற்ற அரசு என்கிறார். இதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம், இதற்கு புத்தியா தேவை? புத்தி கெட்டவன்தான் செய்வான். மக்களின் நிலையை அறிந்து செயல்படவேண்டும். வரி போடுவதும் தெரியக்கூடாது, வசூலிப்பதும் தெரியக்கூடாது. இந்த ஆட்சியில் அனைத்திற்கும் வரிதான். இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


Jayakumar ADMK:  வீர தீர சூர வசனங்களும் ஃபோட்டோ ஷூட்டும்தான்.. முதலமைச்சரை விமர்சிக்கும் ஜெயக்குமார்

ஃபோட்டோஷூட் முதலமைச்சர்

”அதிமுக ஒருபோதும் ஊழலை சுட்டிக்காட்ட தவறியதில்லை. அதனை அதிமுக எப்போதும் செய்யும் அண்ணாமலை இப்போது திமுகவின் ஊழலை சுட்டிக்காட்டுகிறார். தக்காளி விலை தங்கத்தின் விலைக்கு நிகராக உயர்ந்துள்ளது. தக்காளி மட்டுமல்ல இஞ்சி, பூண்டு உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துவிட்டது.  இதுகுறித்து  கூறுவதை முதலமைச்சரின் காதுகள் கேட்காது. மாறாக வீர தீர சூர வசனங்கள் பேசிக்கொண்டு, ஃபோட்டோ ஷூட் நடத்திகொண்டு இருப்பவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்” என அந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget