மேலும் அறிய

''மன்னிக்க முடியாது; தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' - எழுவர் விவகாரத்தில் நாராயணசாமி ஆவேசம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்தது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தமிழக அரசின் கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் பேசியிருப்பதாவது,

“ புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் இல்லை. அதற்கான கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்காமல் இருந்ததால் பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் படுக்கைகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிப்மரில் குறைந்தபட்சம் 1,000 படுக்கைகள் அமைக்க வேண்டும். அதில் 70 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 30 சதவீதம் வென்டிலேட்டர் படுக்கைகளாகவும் அமைத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 700 ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்க வேண்டும்.


'மன்னிக்க முடியாது; தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' - எழுவர் விவகாரத்தில்  நாராயணசாமி ஆவேசம்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 75 சதவீத படுக்கைகளை மாநில அரசு கையகப்படுத்தி, அதன் மூலம் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் புதுச்சேரி மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.

மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மிகக்குறைந்த அளவே தடுப்பூசி வந்துள்ளது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு நிர்வாகம் துரிதமாக செய்ய வேண்டும். மாநில நிதியில் இருந்து தடுப்பூசி பெற்று மக்களுக்கு போட வேண்டும். கருப்பு பூஞ்சை நோய்க்கு எதிரான மருந்துகளை உடனடியாக கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது, அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு கூறியுள்ளனர்.


'மன்னிக்க முடியாது; தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' - எழுவர் விவகாரத்தில்  நாராயணசாமி ஆவேசம்

ஆனால், ராஜீவ்காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  அது சில அரசியல் கட்சி மற்றும் பொதுநலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.

ஆனால், காங்கிரஸ் தொண்டன்  என்ற முறையில் சொல்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Embed widget