மேலும் அறிய

செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார்.

முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் வருகை தந்து நலம் விசாரித்தார்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

கரூரில் 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கரா நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கடந்த மாதம் 16-ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் சி பி சி ஐ டி போலீசாரால் அவரை கைது செய்யப்பட்டு பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் இருந்தார். இதனிடையில் சி பி சி ஐ டி போலீசார் விசாரணைக்காக இரண்டு நாளும், வாங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது பதியப்பட்ட வழக்கிற்காக இரண்டு நாளும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் திருச்சி மத்திய சிறைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் சிறைச்சாலையில் சென்று அவரிடம் நலம் விசாரித்து தொடர்ந்து வழக்கு பற்றி கேட்டறிந்தனர்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

அதைத்தொடர்ந்து கடந்த 31.07. 2024 அன்று ஜாமின் மனு மீது விசாரணை நடத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் 9 நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்க்கு ஜாமீன் வழங்கினார். அதை தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் பிரவீன் உள்ளிட்டோர் சி பி சி ஐ டி அலுவலகத்தில் காலை, மாலை என இரு வேலையிலும் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாங்கல் காவல் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வெளியிட்டார்.

 

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

அதை தொடர்ந்து தற்போது வரை இரு வேலையிலும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கையெழுத்திட்டு வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க இன்று கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாடகை குடியிருப்பு வீட்டிற்கு வருகை புரிந்து அவரிடம் நலம் விசாரித்தார்.

 


செந்தில் பாலாஜிக்காகத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது - எடப்பாடி பழனிச்சாமி சொல்வது என்ன?

 

அதை தொடர்ந்து வழக்கு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் முதலமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அதிமுகவினரின் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதன் காரணத்தால் அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம் ஆர் விஜய பாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரது கைது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.