மேலும் அறிய

Erode East By Election 2023: எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; ஓபிஎஸ் பேட்டி..!

Erode East By Election 2023: அதிமுகவின் நலனுக்காக பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

Erode East By Election 2023: அதிமுகவின் நலனுக்காக பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமே. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவது அதுதான். அதிமுகவின் நலனுக்காக நாங்கள் பழனிச்சாமி அணியுடன் இணைந்து செயல்பட தயார் எனவும் அவர் கூறியுள்ளார். 

சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். வனாகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதமாக, எனது இசைவு இல்லாமலே நடைபெற்றது என குறிப்பிட்டார். 

இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் முழுத் தகுதியும் எங்களிடம் தான் உள்ளது. இரட்டை இலை தொடர்பாக தேர்தல் களத்தில் சிக்கல் ஏற்படும் போது, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். 

 அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சியும் மேற்கொள்வோம். அதிமுக நலனுக்காக எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்த ஓ. பன்னீர் செல்வம் ’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மேற்கோள் காட்டினார். தேர்தல் ஆணையம் தரப்பில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

அதிமுக உரிமை கோறல் சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த  வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கில் விசாரணை நடந்தது. இதில் ஓபிஎஸ் தரப்பில் பல வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஜனவரி 16 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பில் 39 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கில் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்ற நிலை உள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பதே அதிமுகவின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் தான். இந்நிலையில் ஓபிஎஸ் அணியினரின் நிலைப்பாடு இபிஎஸ் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அமைந்துள்ள கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் என்பது திமுகவிற்கு நன்றாகவே தெரியும். இந்நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகாளான செங்கோட்டையன், கே.சி கருப்பணன் ஆகியோருடைய மாவட்டம் என்பதாலும் அதிமுக இந்த இடைத் தேர்தலில் இறங்கி ஒரு கை பார்ர்க தயாராகி வரும் நிலையில், சின்னம் தொடர்பான சிக்கல் எழும் நிலையில் அதிமுகவின் குறிப்பாக எடப்பாடிக்கு வெற்றி முகம் என்பது குறைவு தான்.  

 

தலைப்பு செய்திகள்

MDMK functionaries in DMK : வெளியேறிய வைகோ.! அடுத்த நொடியே கிரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்- அறிவாலயத்தில் குவிந்த மதிமுகவினர்
வெளியேறிய வைகோ.! அடுத்த நொடியே கிரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்- அறிவாலயத்தில் குவிந்த மதிமுகவினர்
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
Udhayanidhi vs Vijay : சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
சட்டசபையில் அடுத்தது சிஎம் விஜய்யின் டான்ஸ் தான்.! தவெக ஆட்சியின் போலி பிம்பம் உடைகிறது- சீறும் உதயநிதி
சர்ச்சை பேச்சு அமைச்சர் ஷாஜகான்: கருப்புக் கொடி பிடித்த திமுகவினர்: தஞ்சையில் பரபரப்பு... 105 பேர் அதிரடி கைது!
சர்ச்சை பேச்சு அமைச்சர் ஷாஜகான்: கருப்புக் கொடி பிடித்த திமுகவினர்: தஞ்சையில் பரபரப்பு... 105 பேர் அதிரடி கைது!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Maruti Price Hike: இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
இன்விக்டோ தொடங்கி ஜிம்னி வரை - எஸ்யுவிக்களின் விலையை ஏற்றிய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
MDMK functionaries in DMK : வெளியேறிய வைகோ.! அடுத்த நொடியே கிரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்- அறிவாலயத்தில் குவிந்த மதிமுகவினர்
வெளியேறிய வைகோ.! அடுத்த நொடியே கிரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்- அறிவாலயத்தில் குவிந்த மதிமுகவினர்
Embed widget