மேலும் அறிய

திராவிட மாடல் அல்ல திறமற்ற மாடல்‌; திமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளே கிடைக்காது- ஓபிஎஸ் கண்டனம்

தி.மு.க.வின்‌ மெத்தனப்‌ போக்கினைப்‌ பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான்‌.

தமிழ்நாட்டில்‌ புதிதாக அரசு மருத்துவக்‌ கல்லூரிகளை உருவாக்காத தி.மு.க. அரசிற்குக் கடும்‌ கண்டனத்தைத் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ‌

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில்‌ அதிக மருத்துவக்‌ கல்லூரிகள்‌ திறக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்தான்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. தமிழ்நாட்டில்‌ மொத்தமுள்ள 39 அரசு மருத்துவக்‌ கல்லூரிகளில்‌, 24 மருத்துவக்‌ கல்லூரிகள்‌ முன்னாள் முதல்வர்கள் எம்‌.ஜி.ஆர்‌., ஜெயலலிதா மற்றும் ‌ஜெயலலிதாவின் வழியில்‌ நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌ துவங்கப்பட்டன. இதற்கு முற்றிலும்‌ எதிரான நிலை கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ நிலவுகிறது.

தி.மு.க.வின்‌ தோதல்‌ அறிக்கை எண்‌. 164-ல்‌, மருத்துவக்‌ கல்லூரி இல்லாத மாவட்டங்களில்‌, புதிய அரசு மருத்துவக்‌ கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள்‌ கடந்த நிலையிலும்‌, ஒரு அரசு மருத்துவக்‌ கல்லூரியைக்‌ கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால்‌, 99 விழுக்காடு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கூறுகிறார்‌.

25 ஏக்கர்‌ நிலத்தை தேடும்‌ பணியில்‌ தி.மு.க.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்‌ கல்லூரி என்ற அடிப்படையில்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்‌. மூன்று ஆண்டுகளாகியும்‌ இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இப்பொழுதுதான்‌, மேற்படி ஆறு மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரியை அமைக்க 25 ஏக்கர்‌ நிலத்தை தேடும்‌ பணியில்‌ தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால்‌, தற்போது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகள்‌ உருவாகி, அதன்மூலம்‌ கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள்‌ தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும்‌. இதைச்‌ செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன்மூலம்‌, 900 ஏழையெளிய மாணவ, மாணவியர்‌ மருத்துவராவது தடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம்‌ ஒவ்வொரு ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ என்றிருக்கின்ற நிலையில்‌, இனி மேல்‌ நிலத்தை கண்டுபிடித்து, கையகப்படுத்தி, விண்ணப்பிப்பது என்பது இயலாத காரியம்‌.

திராவிட மாடல் அல்ல திறமற்ற மாடல்‌

தி.மு.க.வின்‌ மெத்தனப்‌ போக்கினைப்‌ பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான்‌. இந்த நிலை நீடித்தால்‌, இந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ ஒரு மருத்துவக்‌ கல்லூரியும்‌ தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. தி.மு.க.வின்‌ திறமையின்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை திறமற்ற மாடல்‌ என்பதுதான்‌ திராவிட மாடலின்‌ பொருள்‌ போலும்‌.

ஏழையெளிய மாணவ, மாணவியர்‌ அதிகளவில்‌ மருத்துவராக வேண்டுமானால்‌, அதற்கு ஒரே வழி அதிக அளவில்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரிகள்‌ துவக்கப்பட வேண்டும்‌.

இதனை முதலமைச்சர்‌ அவர்கள்‌ மனதில்‌ நிலைநிறுத்தி, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தொண்டர்கள்‌ உரிமை மீட்புக்‌ குழுவின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Top 10 News Headlines: 3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
TN Weather Alert: அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
அடுத்தடுத்து உருவாகிறது புயல் சின்னம்.! நவம்பரில் தமிழகத்திற்கு ஸ்கெட்ச்- வெதர்மேன் அலர்ட்
Top 10 News Headlines: 3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
3 மாவட்டங்களில் இன்று கனமழை, பிரதமர் மோடி உறுதி, பாகிஸ்தானை எச்சரித்த ஆப்கானிஸ்தான் - 11 மணி செய்திகள்
Farmers: காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.!  கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
காத்திருந்த விவசாயிகளுக்கு குஷி.! கொண்டாட்டமான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Digital Gold SEBI Warning: டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
டிஜிட்டல் தங்கத்துல முதலீடு செய்யப் போறீங்களா.? உஷாரா இருங்க.! எச்சரிக்கும் SEBI
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Southern Railway: தென்மாவட்ட மக்களே..! ரயில் சேவையில் மிகப்பெரிய மாற்றம் - எழும்பூர் கட், தாம்பரம் ஒன்லி
Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தி.! சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட அரசு
Embed widget