மாஜி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அடிக்க பாய்ந்த திமுகவினர்.! கரூரில் பரபரப்பு - நடந்தது என்ன.?
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை திமுகவினர் தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் திமுக- அதிமுக மோதல்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அதிலும் தமிழகத்தில் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் தொகுதி கரூர் தொகுதியாகும். இந்த தொகுதியில் திமுகவின் செந்தில் பாலாஜிக்கும், அதிமுகவின் எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் இனாம் இடப்பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்த நோட்டீஸ் வழங்கிய நிலையில் அவர்கள் மீது திமுகவினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இனாம் பிரச்சனை நோட்டீஸ் வழங்கிய அதிமுக
இந்தநிலையில், கரூர் மாவட்டம் வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கோயில் இனாம் இடப்பிரச்சனை சம்பந்தமாக அதிமுக சார்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு அதனை அதிமுகவினர் இன்று தான்தோன்றி மலை பகுதியில் வாஞ்சிநாதன் பொதுமக்களிடம் விநியோகித்து கொண்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் நோட்டீஸ் வழங்கியதை தடுத்ததால் அங்கு இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கரையும் திமுகவினர் தாக்க முற்பட்டனர். இதனையடுத்து காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர்.
எம் ஆர் விஜயபாஸ்கரை தாக்க முயற்சி
அப்போது நோட்டீஸ் விநியோகம் செய்த பெண்களை தாக்கிய திமுகவினரை கைது செய்ய கோரி அதிமுகவினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் அதிமுக பெண் நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் திமுக மற்றும் அதிமுகவினரை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். இதனையடுத்து திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















