![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
![”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! Chief Minister Stalin's letter to Prime Minister Modi related to Start caste census immediately ”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/26/23a2666885aba210ebf7d47c7bb994571719412654942572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கி கடிதம் எழுதியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கோட்பாட்டின் வழியில் 'எல்லோருக்கும் எவ்வணம் என்ற சமுதாய சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, தனது சமூகநீதிப் பயணத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகிறது.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சம வாய்ப்புகளையும் உரிமைகளையும் கொண்டவர்களாக மாற்றுவதன் மூலம் தான் உண்மையான, பால்லான பொருளாதார வளர்ச்சி அடைந்த சமுதாயமாக நாம் மாற இயலும், அந்த போக்கத்துடன்தான் கல்வி சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய தளங்களிலும் அனைத்துத்தாப்பு மக்களிடையேயும் 93 சமநிலையை கொண்டுவருவதற்காக இடஒதுக்கீட்டு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்னர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கே வளர்ச்சி அடைய வழிவகை செய்து அதனைக் கடைபிடித்து வருகிறோம
பிரதமருக்கு கடிதம்:
சமீபகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை பேசப்பட்டு வருகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கருத்தும் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொருள் குறித்து இந்தப் பே முழுமையான விவரங்களை எடுத்துரைப்பது சரியானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் @narendramodi அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/58RXMsIRNP
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 26, 2024
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரியான கண்க்கெடுப்பையும் இணைத்தே நடத்திட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிவாரிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை இணைத்து முதலமைச்சர் ஸ்டாலின் , பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)