மேலும் அறிய

சென்னை பள்ளியில், ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெற்றோர்.. என்ன நடந்தது?

தாம்பரம் சங்கர வித்யாலயா பள்ளியில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு பெற்றோர் வர தடை விதித்ததாக கூறி சேலையூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பினர் புகார்.

தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர். பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின் தந்தை அழைத்து, தங்கள் மனைவியை வெளியே சென்று ஹிஜாபைக் கழற்றி வைத்துவிட்டு வருமாறு கூறியதாக கூறப்படுகிறது.

சென்னை பள்ளியில், ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெற்றோர்.. என்ன நடந்தது?
 
இது தொடர்பாக பள்ளி முதல்வர் உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்தபோது, பள்ளியின் உள்ளே ஹிஜாப் அணிந்து யாரும் வர அனுமதியில்லை என்று முதல்வரும் கூறியதாகவும் எனவே சம்பந்தபட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசீக் மீரான் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், தமுமுகவினர்  என பலரும் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
 
புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன ?
 
ஆசிக் மைதீன் அளித்துள்ள புகார் மனுவில், நான் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறேன். கிழக்கு தாம்பரத்தில் உள்ள சங்கர வித்யாலயா என்ற பள்ளியில் நேற்று மதியம் சுமார் 1. 15 மணிக்கு என்னுடைய 4 வயது பெண் பிள்ளைக்கு பள்ளியில் , lkg இடம் கேட்டு சென்று இருந்தேன். அப்போது என் மனைவியும் என்னுடன் வந்திருந்தார் . பள்ளிக்கூட உள்ளறையில் சுமார் 45 நிமிடம் காத்திருந்த நிலையில், அங்கு வந்த அலுவலர் சுந்தர ராமன் என்பவர் என்னை அழைத்து, உங்கள் மனைவியின் பர்தாவை வெளியில் சென்று கழட்டி வைத்துவிட்டு உள்ளே வரவேண்டும் என்று என்னிடத்தில் தெரிவித்தார்.

சென்னை பள்ளியில், ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெற்றோர்.. என்ன நடந்தது?
இதனால் அதிர்ச்சி அடைந்த நான் என்ன காரணத்திற்காக இதுபோல் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, எங்கள் பள்ளியின் தற்போதைய புதிய உத்தரவின்படிதான் நான் சொல்கிறேன். ஆகவே இங்கு வரக்கூடிய இஸ்லாமிய பெண்கள் பர்தாவை கழட்டி வைத்துவிட்டு தான் பள்ளிக்கு வரவேண்டும் என்பது புது உத்தரவு என்று சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்நிலையில் இது குறித்து நான் உடனடியாக பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்கும்போது அவர்களும் இதுதான் நிலை நீங்கள் பர்தாவை கழட்டி வைத்துவிட்டு தான் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்கள்.

சென்னை பள்ளியில், ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட பெற்றோர்.. என்ன நடந்தது?
 
ஆகவே சட்டத்திற்கு புறம்பாக சிறுபான்மை இஸ்லாமிய மக்களுடைய நம்பிக்கைக்கு எதிராகவும் மேலும் இந்திய அரசியல் அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மீறிய வகையில் இந்த செயல்பாடு அமைந்திருக்கிறது . ஆகவே இந்த சுந்தரராமன் என்ற நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இவருக்கு ஆதரவாக இருக்கக்கூடிய இந்த  பள்ளி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்து இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்தும் தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என புகார் அளித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget