![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kalyanaraman Jail Sentence: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், அவருக்கு 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
![Kalyanaraman Jail Sentence: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு BJP Kalyanaraman sentenced to 163 days in jail in the case of defamaing Muslims Kalyanaraman Jail Sentence: பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை - எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/81e44b8bce4f173aebea8db2180c599e1678278464185224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் 163 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தான் அளித்த பிரமாண பத்திரத்தை மீறி தொடர்ந்து சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய அவதூறு கருத்துக்குகளை பதிவிட்டு வந்தார். காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கல்யாணராமன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 163 நாட்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஆனால், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் அவர் சிறையில் இருந்து வந்ததால், தண்டனைக் காலம் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
பெண்கள், மதங்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு
தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர். பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான எம்.கோபிநாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இதனால் கல்யாணராமன் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது
மேலும், அவருக்கு எதிராக கோபிநாத் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, அவரை கைது செய்தது மட்டுமில்லாமல் அவரை அக்டோபர் 23ஆம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வானது, கல்யாணராமனின் மீதான குண்டாஸை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.
3 மாதத்தில் குற்றப் பத்திரிகை
அதன் பின்னர், கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், அவதூறாகப் பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் அளித்த நிபந்தனை வாக்குறுதியை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை கல்யாணராமன் வெளிப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.
எனவே கல்யாணராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோபிநாத் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மூன்று மாதங்களுக்குள் கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)