மேலும் அறிய

கூடுதல் சீட்டுக்காக தான் பாஜக மிரட்டுகிறது; எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர் - அதிமுக முன்னாள் அமைச்சர்

கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம். அதனை பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார். கூடுதல் சீட்டுக்காக மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி, பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.


கூடுதல்  சீட்டுக்காக தான் பாஜக மிரட்டுகிறது; எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர் - அதிமுக முன்னாள் அமைச்சர்

அப்போது பேசிய சண்முகநாதன், "வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பூத் கமிட்டியை நல்ல முறையில் அமைத்தால் தூத்துக்குடி தொகுதி எப்போதும் நம்வசம் தான் இருக்கும். பூத் கமிட்டியில் அந்தந்த வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ளவரை நியமிக்க வேண்டும். ஒரே குடும்பத்தினரை நியமிக்க கூடாது. பூத் கமிட்டியில் 19 பேரும், மகளிர் குழுவில் 25 பேரையும், இளைஞர், இளம்பெண்கள் பாசறை குழுவில் 25 பேரையும் சேர்க்க வேண்டும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால் சட்டப் போராட்டம் நடத்த வக்கீல்கள் உள்ளனர். நம் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளது. நாம் எதிர் கட்சியாக இருந்தாலும் யாருக்கும் பயந்து செயல்படவில்லை.


கூடுதல்  சீட்டுக்காக தான் பாஜக மிரட்டுகிறது; எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர் - அதிமுக முன்னாள் அமைச்சர்

ஒரு ஓட்டு கூட சிதற விடக்கூடாது. அனைவரையும் அரவணைத்து ஓட்டு போட வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும். கட்சியில் இருந்து சில துரோகிகள் விலகி விட்டார்கள். தற்போது கட்சியை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நாம் நம்மை பற்றித்தான் நினைக்க வேண்டும். கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம். அதனை பொதுச் செயலாளர் பார்த்துக் கொள்வார்.


கூடுதல்  சீட்டுக்காக தான் பாஜக மிரட்டுகிறது; எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர் - அதிமுக முன்னாள் அமைச்சர்

கூடுதல் சீட்டுக்காக மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தைரியமான தலைவர். யாரும் மாவட்ட கழக அனுமதி இல்லாமல் நோட்டீசு ஒட்ட வேண்டாம். நமக்கு உத்தரவு வந்தால் அனைவரையும் ஓட, ஓட விரட்ட முடியும். பா.ஜனதா வேறு வழியில்லாமல் கடைசியில் நம்மிடம் தான் வருவார்கள். ஆகையால் பா.ஜனதா பற்றி பேச வேண்டாம்" என்று கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் யு.எஸ்.சேகர், நடராஜன், விக்னேஷ், ஜெ.தனராஜ், கே.ஜெ.பிரபாகர், அருண்ஜெபக்குமார், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், எம்.பெருமாள், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, வக்கீல்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் ஆதித்தன், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget