மேலும் அறிய

Arumbakkam Settlement: அரும்பாக்கம் விவகாரம்...முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - விசிக வேண்டுகோள்!

மண்ணின் பூர்வ குடிமக்களை அப்புறப்படுத்துவது அரசியல் ரீதியாக திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்நகர் பகுதி மக்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளுக்குச் சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி வருகிறது.  இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியைச் சந்தித்துள்ளது.

மேலும் குடிசைகளை அகற்றும் பணியால் பாதிக்கப்பட்ட மக்களை அந்தக் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன்:

’அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் மக்களை சென்னை மாநகராட்சி அப்புறப்படுத்தி அவர்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில்  காலங்காலமாக இதே பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும்  21 பேருக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை என அனைத்து ஆவணங்கள் இருந்தும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. 

இந்த 21 பேருக்கும் வீடு வழங்க விரைவில் அமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த உள்ளோம்


Arumbakkam Settlement: அரும்பாக்கம் விவகாரம்...முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - விசிக வேண்டுகோள்!

சென்னையின் பூர்வக்குடி மக்களை பெருநகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் போக்கிற்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மண்ணின் பூர்வ குடிமக்களை அப்புறப்படுத்துவது அரசியல் ரீதியாக திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது’ என தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்

இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் ,மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் இரா. செல்வம், ஆகியோர் உடனிருந்தனர்

இதற்கிடையே, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரைக்கு அருகில் வசிக்கும் 250 பூர்வகுடிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்படாமல் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் நடப்பது என்ன என்பது குறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு கூவம் நதிக்கரையோரம் இருக்கும் குடியிருப்புகளை அகற்றி, அங்குவசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு அரசு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் ராதகிருஷ்ணன் நகர் பகுதியில் வெள்ள பாதிப்புக்கு அதிகம் வாய்ப்புள்ள சுமார் 247 வீடுகளை அப்புறப்படுத்த போவதாக ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கூவம் ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் ஆற்றின் கரைக்கு நெருக்கமாக கட்டப்பட்டுள்ள 100 குடியிருப்புகளை  முதற்கட்டமாக இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே கூவம் ஆற்றின் கரைக்கு மிக அருகில் இருக்கும் 100 குடும்பங்களில் 93 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கு மட்டும் இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர், அப்பகுதி மக்கள். 

ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அரசால் அப்புறப்படுத்தப்பட உள்ள சில வீடுகளின் உரிமையாளர்கள் வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள தங்களது வீடுகளை வாடகைவிட்டு உள்ளனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள், வேறு பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget