மேலும் அறிய

Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி

எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுடைய எதிரி திமுகதான், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்களியுங்கள் எனபிரசாரத்தில் அன்புமணி பேச்சு

விழுப்புரம் : அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். திமுகவை ஒழிக்க எம் ஜி ஆர் விரும்பினார். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுடைய எதிரி திமுக தான், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்களியுங்கள் என அன்புமணி பேசினார்

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கௌரவத்தலைவர் கோ க மணி, வழக்கறிஞர் பாலு, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மக்கள் சமூகநீதி பெற பாமக வெற்றிபெற வேண்டும்

இத்தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியமான தேர்தலாகும். தமிழக மக்கள் சமூகநீதி பெற பாமக வெற்றிபெற வேண்டும் வேண்டும்.  திமுக வேட்பாளர் வெற்றால் அவர் குடும்பம் முன்னேறும். பாமக வேட்பாளர் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடு நடைபெறும். அடுத்தமாதமே 10.5 சதவீதம் கொடுக்கப்படும். திமுக அமைச்சர்கள் கொண்டு வந்த மூட்டையில் உள்ளதை கொடுக்கும்போது வாங்குவதும் வாங்காத உங்கள் விருப்பம்.

தமிழகத்தின் வாழ்க்கை பிரச்சினை உங்கள் கையில் உள்ளது. இந்த மண் செய்த தியாகத்திற்கு இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் ஜி கே மணி எப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு கொடுப்பீர்கள் என்று கேட்டபோது, முதல்வர் ஸ்டாலின் கூறியது என்னவெனில், நீங்கள் உங்கள் கூட்டணி கட்சியோடு பேசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.

ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக முதல்வர் தவறாக கூறியுள்ளார். கொடுக்கப்பட்ட இடஒதுக்கீடு சதவீதத்தைதான் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

இவர்களில் யார் பொய் சொல்கிறார்கள்?

சமூக நீதிக்கும் இன்றைய திமுகவிற்கும் சம்மந்தமில்லை. கடந்த விக்கிரவாண்டி இடை தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்னாயிற்று ?  10.5 சதவீதம் கொடுக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகுதான் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று கூறுகிறார்.

தர்மபுரியில் உதயநிதி பேசும்போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று கூறி வாக்குகள் பெற்ற பின் ஏமாற்றியுள்ளார்.  

இதுதான் சமூகநீதியா வெட்கக்கேடு. முதல்வர் தரவுகள் இல்லை என்கிறார். அமைச்சர் சிவசங்கர் தரவுகள் உள்ளது என்கிறார். இவர்களில் யார் பொய் சொல்கிறார்கள்? இது என்ன மோசடி?  

கலைஞர் இருந்திருந்தால் இன்னேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்

இந்தியாவில் 6 இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது பாமக. கலைஞர் இருந்திருதால் இன்னேரம் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். கலைஞர் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய காரணம் பாமகதான். இது குறித்த வழக்கை கலைஞருக்காக பாமக  திரும்பபெற்றது. கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களில் 90 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள். இச்சாவுகளுக்கு 2 எம் எல் ஏதான் காரணம் என்று பள்ளி செல்லும் சிறுவர்கள் கூறுகிறார்கள். இச்சாவு குறித்து  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். சிபிசிஐடி போலீஸார் மீது மரியாதை உள்ளது. நம்பிக்கை இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஊராட்சிமன்ற தலைவருக்கு உரிமை உள்ளது. ஆனால் முதல்வர் உரிமை இல்லை என்கிறார்.

எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். திமுகவை ஒழிக்க எம் ஜி ஆர் விரும்பினார். அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லை, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், உங்களுடைய எதிரி திமுக, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாமகவிற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பின் போது இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததால் வழி விட கூறி அன்புமணி பேச்சை நிறுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget