![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
OPS : ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு இவர்தான் காரணம்.. முன்னாள் அமைச்சரை கைகாட்டிய ஓபிஎஸ்..!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினை பெரிதானது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
![OPS : ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு இவர்தான் காரணம்.. முன்னாள் அமைச்சரை கைகாட்டிய ஓபிஎஸ்..! AIADMK Single Leadership Issue Raised by Former Minister Jayakumar- O Panneerselvam Press Meet OPS : ஒற்றைத் தலைமை பிரச்சினைக்கு இவர்தான் காரணம்.. முன்னாள் அமைச்சரை கைகாட்டிய ஓபிஎஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/16/508d37c68ed7732d81d0b2edaabe5352_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பூதகரமாக வெடித்து வரும் சூழலில் சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், ஒரு அறையில் பேச வேண்டிய 'ஒற்றைத் தலைமை' விவகாரத்தை அம்பலத்திற்கு கொண்டுவந்து பேசி விவாதம் ஆக்கியிருக்கிறார்கள்.
#BREAKING | ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் - ஓபிஎஸ்https://t.co/wupaoCQKa2 | #EdappadiPalanisamy #OPannerselvam #ADMK #AIADMK #EPS #OPS pic.twitter.com/bB8zZ3LUNH
— ABP Nadu (@abpnadu) June 16, 2022
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினை பெரிதானது. மீண்டும் அதிமுக ஆட்சியை நிலைநிறுத்த பணியாற்ற வேண்டுமே தவிர, தற்போது இந்த பிரச்சனை தேவையா..? என்று கேள்வி எழுப்பினார்.
#BREAKING | 'ஒற்றைத் தலைமை' பற்றி விவாதிக்க போகிறோம் என்று சொல்லாமலேயே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓ.பன்னீர்செல்வம்https://t.co/wupaoCQKa2 | #EdappadiPalanisamy #OPannerselvam #ADMK #AIADMK #EPS #OPS pic.twitter.com/EY3JZvW0Kx
— ABP Nadu (@abpnadu) June 16, 2022
நகமும் சதையுமாக உள்ள ஓபிஎஸ் இபிஎஸ்
ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி குரல் எழுப்பி வரும் நிலையில், ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல நகமும் சதையும் போல ஒன்றாக இருப்பதாக பொன்னையன் முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
#BREAKING | 'இரட்டைத் தலைமையே' அதிமுகவில் தொடர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் - ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பேட்டிhttps://t.co/wupaoCQKa2 | #EdappadiPalanisamy #OPannerselvam #ADMK #AIADMK pic.twitter.com/8UZsBZgtIY
— ABP Nadu (@abpnadu) June 16, 2022
”ஒற்றைத்தலைமை குறித்த கேள்வியே தேவையற்ற ஒன்று. அந்த முடிவை பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்கும். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை குறித்து பேச வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜோசியம் சொல்ல முடியாது. ஓபிஎஸும், இபிஎஸும் கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல ஒன்றாகவே உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)