என்ன தப்பு செய்தேன் !! ரவுடி மாமூல் கேட்டேனா ? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா ? ஜெயக்குமார் ஆதங்கம்
நான் என்ன தப்பு செய்தேன். ஊரை அடித்து உலையில் போட்டேனா ? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா ? கள்ளச் சாராயம் காய்ச்சினேனா , ரவுடி மாமூல் கேட்டேனே ?

அதிமுக சார்பில் பொதுக் கூட்டம்
2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் , அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள் இபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் , ஆங்காங்கே அக்கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் , சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
ரவுடி மாமூல் கேட்டேனா ?
2001-ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற வைத்த நீங்கள் 2021-ம் ஆண்டு தேர்தலில் கைவிட்டுடீங்களே ? நான் என்ன தப்பு செய்தேன். ஊரை அடித்து உலையில் போட்டேனா ? கட்ட பஞ்சாயத்து பண்ணேனா ? கள்ளச் சாராயம் காய்ச்சினேனா , ரவுடி மாமூல் கேட்டேனா ? இல்லை அடாவடித்தனம் பண்ணி பொறுக்கித்தனம் பண்ணி ரவுடித்தனம் பண்ணேனே ? யாராவது சொல்லுங்க பார்க்கலாம். அப்படி இருந்தா அரசியலை விட்டு போய் விடுகிறேன்.
உங்களையே சுத்தி சுத்தி வந்தேன்
அதிமுக என்றைக்கும் அந்த மாதிரி கிடையாது. ஜெயக்குமாரும் கிடையாது. உங்களையே சுத்தி சுத்தி வந்தேன். இன்னும் 10 தேர்தலில் நிற்பேன். அதுவும் ராயபுரம் தொகுதியில் தான் நிற்பேன். நான் பொதுச் செயலாளர் கிட்ட கேட்டேன் என்றால் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர் இல்லன்னா சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போய் நிற்பேன். ஆனால் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் என்றால் ராயபுரம் தான் என்றார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















