மேலும் அறிய

ABP C Voter Survey : இந்திய பிரதமராவதற்கு தகுதியான நபர் யார்? - ABP C Voter கருத்துக்கணிப்புகளும், சதவிகிதங்களும்

கொரோனா பேரிடரால் இந்தியா முழுவதும் நெருக்கடியான நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் யார் என்று ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளனர்.

ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் யார் என்று நினைக்கிறீர்கள் என்று மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில மக்களிடம் கேட்கப்பட்டது.

அதில், மேற்கு வங்கத்தில் 36.29 சதவீதமும், குஜராத்தில் 46.03 சதவீதமும், மகாராஷ்ட்ராவில் 44.14 சதவீதமும், பஞ்சாப் மாநிலத்தில் 12.67 சதவீதமும், தமிழ்நாட்டில் 22.04 சதவீதமும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியே அந்த பதவிக்கு தகுதியான நபர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு ஆதரவாக 41.99 சதவீத மக்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.


ABP C Voter Survey : இந்திய பிரதமராவதற்கு தகுதியான நபர் யார்? - ABP C Voter கருத்துக்கணிப்புகளும், சதவிகிதங்களும்

அவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 3.49 சதவீத மக்களும், குஜராத்தில் 10.15 சதவீத மக்களும், மகாராஷ்ட்ராவில் 12.36 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 3.56 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 23.04 சதவீத மக்களும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பில், பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தி தகுதியான நபர் என்று 11.56 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/cvoter-mood-of-the-nation-survey-2021-2-years-modi-government-people-reaction-about-corona-vaccination-program-4436

தற்போதைய காங்கிரஸ் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியுமான சோனியாகாந்தி பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 0.43 சதவீத மக்களும், குஜராத்தில் 0.68 சதவீத மக்களும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2.91 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 0.76 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 4.45 சதவீத மக்களும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் அவருக்கு ஆதரவாக 2.13 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ABP C Voter Survey : இந்திய பிரதமராவதற்கு தகுதியான நபர் யார்? - ABP C Voter கருத்துக்கணிப்புகளும், சதவிகிதங்களும்

இதுதவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 7.48 சதவீத மக்களும், குஜராத்தில் 7.01 சதவீத மக்களும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 6.55 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 19.89 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 8.35 சதவீத மக்களும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று 6.5 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று குஜராத்தில் 3.19 சதவீத மக்களும், மகாராஷ்ட்ராவில் 1.22 சதவீத மக்களும், பஞ்சாபில் 0.6 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று பூஜ்ஜியம் சதவீத ஆதரவுதான் பதிவாகி உள்ளது. குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் பிரதமராக வேண்டும் என்று 2.06 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score:  அதிரடியாக ஆடும் டெல்லி கேபிடல்ஸ்..விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் டெல்லி கேபிடல்ஸ்..விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score:  அதிரடியாக ஆடும் டெல்லி கேபிடல்ஸ்..விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
RR vs DC LIVE Score: அதிரடியாக ஆடும் டெல்லி கேபிடல்ஸ்..விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Embed widget