மேலும் அறிய

மயிலாடுதுறை: ஓஎன்ஜிசி-யின் எண்ணெய் கிணறு புனரமைப்புக்கு எதிர்ப்பு! கொந்தளித்த மக்கள்...!

மயிலாடுதுறை அருகே செயல்படாமல் இருந்த பழைய எண்ணெய் கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கியதைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் பகுதியில், செயல்படாமல் இருந்த பழைய எண்ணெய் கிணறுகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கியதைக் கண்டித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய கிணறுகளில் புதுப்பிக்கப்படும் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்காவில் உள்ள மேலையூர் ஊராட்சியில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு மற்றும் எண்ணெய் கிணறு செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது. நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் என உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாக எதிர்த்து வந்ததால், இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஓஎன்ஜிசி நிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் மீண்டும் இந்த எண்ணெய் கிணறுகளில் புனரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


மயிலாடுதுறை: ஓஎன்ஜிசி-யின் எண்ணெய் கிணறு புனரமைப்புக்கு எதிர்ப்பு! கொந்தளித்த மக்கள்...!

வெடித்த போராட்டம் 

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் தேரழுந்தூர் பகுதியில் திரண்டனர். மத்திய அரசுக்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பியவாறு, அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை: ஓஎன்ஜிசி-யின் எண்ணெய் கிணறு புனரமைப்புக்கு எதிர்ப்பு! கொந்தளித்த மக்கள்...!

போராட்டத்தின்போது, “புனரமைப்புப் பணி என்ற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறது,” “எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் அழித்து, விவசாயத்தை நாசப்படுத்திவிடும்,” “உடனடியாக இந்த தளவாடப் பொருட்களை அகற்றி, பணியாளர்கள் வெளியேற வேண்டும்,” எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். நீண்ட நேரம் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் குத்தாலம் வட்டாட்சியர் ராஜரத்தினம் மற்றும் காவல் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களுடன் அவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்துவதாகவும், அப்பகுதியில் உள்ள தளவாடப் பொருட்களை அங்கிருந்து அகற்றுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், தங்களது மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதிகாரிகளின் தலையீடு தற்காலிகமாக நிலைமையைச் சீரமைத்தாலும், மக்களின் கோபம் இன்னும் தணியவில்லை.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் நிலைப்பாடு

போராட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், “இதே பகுதியில் கடந்த மாதமும் மராமத்து என்ற பெயரில் ஓஎன்ஜிசி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அப்போது நாங்கள் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம். ஆனால், தற்போது மீண்டும் 13 நாட்களாக எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி நிறுவனம் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது,” 


மயிலாடுதுறை: ஓஎன்ஜிசி-யின் எண்ணெய் கிணறு புனரமைப்புக்கு எதிர்ப்பு! கொந்தளித்த மக்கள்...!

மேலும், “இந்தப் பகுதியில் உள்ள அனைத்து தளவாடப் பொருட்களையும் நிரந்தரமாக அகற்ற வேண்டும். இந்த எண்ணெய் கிணறுகளை மூட மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும். அதை விடுத்து, மீண்டும் புதுப்பிக்கும் பணிகளைத் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களைத் திரட்டி, பிரதான சாலைகளில் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம்.”

அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் பெட்ரோலியத் திட்டங்களுக்கும், உள்ளூர் மக்களின் விவசாய நலன்களுக்கும் இடையே நிலவிவரும் இந்த மோதல் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் விவசாயப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசும், மத்திய அரசும் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களின் போராட்டங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா? அல்லது தற்காலிக அமைதியுடன் இந்தப் பிரச்சனை முடிந்து விடுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget