Mayiladuthurai Power Shutdown (31.07.2025) :மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பவர் கட் - எந்தெந்த ஊர் தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown 31.07.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (31.07.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பொறையார் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி மின்கோட்டத்திற்கு உட்பட்ட பொறையார் துணை மின் நிலையத்தில் நாளைய தினம் 31.07.2025 வியாழக்கிழமை அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
பொறையார், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைக்கழி, திருமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆனந்தமங்கலம், ஆனைக்கோயில், திருமெய்ஞானம், பிபிநல்லூர், மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் துணை மின்நிலையம்
இதேபோன்று நாளைய தினம் 31.07.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெரம்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவிசெயற்பொறியாளர் ரமேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் வினியோகம் தடைபெறும் ஊர்கள்
பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கோடைவிளாகம், ஆத்தூர், பெருஞ்சேரி, தத்தங்குடி, கோவஞ்சேரி, அரசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மாறுதலுக்கு உட்பட்ட மின் நிறுத்தம்
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு மின் நிறுத்தத்தால் ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மின் வாரிய அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






















