Mayiladuthurai Power Shutdown (31.01.26): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளைய மின்நிறுத்தம் வாபஸ்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ள வேண்டிய மின்சாரம் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: நவீன உலகில் மின்சாரம் இன்றி ஒரு நிமிடம் கூட இயங்க முடியாது என்ற நிலையில், தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக காலை முதல் மாலை வரை 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்த நிலையில் அதனை நிர்வாக காரணங்களுக்காக வாபஸ் பெற்றுள்ளது.
பராமரிப்புப் பணியின் அவசியம்
பொதுவாக, துணை மின் நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் (Transformers), உயர் அழுத்தக் கம்பிகள் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் தொடர்ந்து இயங்குவதால் அவற்றில் தேய்மானம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் உப்புக்காற்றின் தாக்கத்தால் மின் கம்பிகளில் அரிப்பு ஏற்படக்கூடும். இவற்றைச் சரிசெய்யவும், பழுதடைந்த பாகங்களை மாற்றவும், மின்கம்பிகள் மீது படும் மரக்கிளைகளை அகற்றவும் இந்த 'மாதாந்திரப் பராமரிப்பு' (Monthly Maintenance) மிக முக்கியமானது. இதனை முன்னெச்சரிக்கையாகச் செய்வதன் மூலம், எதிர்பாராத மின்தடை மற்றும் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மின் வெட்டு அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகள்
செம்பனார்கோவில் உதவி செயற்பொறியாளர் சி.சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இரண்டு முக்கியத் துணை மின் நிலையங்களில் நாளை பணிகள் நடைபெற இருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
1. பொறையார் 110/11KV துணை மின் நிலையம்
இங்கிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்கும்
* பொறையார்
* எருக்கட்டாஞ்சேரி
* தரங்கம்பாடி.
* சந்திரபாடி
* காட்டுச்சேரி
* ஆய்ப்பாடி
* சாத்தனூர்
* சங்கரன்பந்தல்
* தில்லையாடி
* திருவிடைக்கழி
* டி.மணல்மேடு
* கண்ணங்குடி
* மாத்தூர்
* திருக்கடையூர்
* அனந்தமங்கலம்
* ஆணைக்கோயில்
* திருமெய்ஞானம்
* பி.பி.நல்லூர்
* மாணிக்கப்பங்கு
* பெருமாள்பேட்டை
* குட்டியாண்டியூர்.
2.கிடாரங்கொண்டான் 110/11KV துணை மின் நிலையம்
இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகள்
மின் வினியோகம் இடங்கள்
* கிடாரங்கொண்டான்
* கருவாழக்கரை
* கஞ்சாநகரம்
* கீழையூர்
* கருவி
* ஆக்கூர்
* செம்பதனிருப்பு
* தலைச்சங்காடு
* நத்தம்
* மடப்புரம்
* காளகஸ்திநாதபுரம்
மற்றும்
முடிகண்டநல்லூர்
நேரமும் கால அவகாசமும்
பராமரிப்புப் பணிகளுக்காக நாளைய தினம் சனிக்கிழமை (31.01.2026) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முக்கியக் குறிப்பு
மின் கட்டமைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் காரணங்களைப் பொறுத்து இந்த மின்தடை நேரத்தில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்
நாளைய தினம் சுமார் 8 மணி நேரம் மின்சாரம் இருக்காது என்பதால் இப்பகுதி மக்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, மின்சாரத்தைச் சார்ந்திருக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது பணிகளை மாற்றியமைத்துக் கொள்வது நல்லது. இந்தத் தற்காலிகச் சிரமம், எதிர்காலத்தில் தடையற்ற மின்சாரத்தைப் பெறுவதற்காகவே என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது என அறிவித்திருந்த நிலையில் நாளைய மின்நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது அந்த பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
























