Mayiladuthurai Power Shutdown (21.01.2025): மயிலாடுதுறையில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown 21.01.2025 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
சீர்காழி மின் கோட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 21.01.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீர்காழி வடக்கு உதவி செயற் பொறியாளர் ராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;
எதிர்வரும் 21-01-2025 செவ்வாய்கிழமை அன்று வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் ஆச்சாள்புரம் துணைமின் நிலையங்களில் உள்ள சீர்காழி நகர்-1 பீடர் மற்றும் பழையார் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணையின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்த பகுதிகள்
தென்பாதி, சீர்காழி புதிய பழைய பேருந்து நிலையங்கள், சட்டநாதர் கோவில், ஈசானிய தெரு, கீழ தென்பாதி, மருத்துவமனை ரோடு, பழையார், புதுப்பட்டினம் சுனாமி நகர், தர்காஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.
வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையம்
வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான ஆத்துகுடி தருமதானபுரம், கதிராமங்கலம் கொண்டத்தூர், திருநன்றியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மின்சாரம் இருக்காது என சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்.
எடமணல் துணை மின்நிலையம்
எடமணல் துணை நிலையம் தொடுவாய் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், தொடுவாய் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளான வேட்டங்குடி, தொடுவாய், எடமணல், கூழையார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மின் கோட்டம்
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 21.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில் உள்ள மங்கநல்லுர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மங்கநல்லூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான மங்கநல்லூர், இலந்தங்குடி, ஆனந்தநல்லூர், கந்தமங்களம், மேலமங்கநல்லூர், பெரம்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மயிலாடுதுறை மின் கோட்ட நகர்புற உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளையதினம் 21.01.2025 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான காவேரி நகர், கூறை நாடு, அக்களூர், அறுபத்துமூவர்பேட்டை, தூக்கனம்குளம், தானியூர், ஆரோக்கியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்
மணக்குடி துணை மின்நிலையம்
மணக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும், சோழசக்கரநல்லூர், நத்தம், ஆலவெளி, செம்மங்கலம், ஓலையாம்புத்தூர், மணக்குடி, கீழ்இருப்பு, கஞ்சா நகரம், மேலையூர், பொன்னுகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
நீடூர் துணை மின்நிலையம்
நீடூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நீடூர், கீழமருதநல்லூர், ஆனந்த தாண்டவபுரம், கொற்றவநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுள்ளது.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

