மேலும் அறிய

காந்தி ஜெயந்தி நாளில் கள்ளச் சந்தையில் படுஜோராக மது விற்பனை - நடவடிக்கை எடுக்குமா மயிலாடுதுறை காவல்துறை..?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காந்தி ஜெயந்தி விடுமுறையில் தினத்தில் வெளிமாநில மது பாட்டில்கள் படுஜோராக விற்பனை ஆகும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டு ஒன்றில் வெளிமாநில மது பாட்டில்களைப் படுஜோராக மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத விற்பனைக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரமும் நடக்கும் ரகசிய விற்பனை

சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது சொந்த வீட்டில், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் மது பாட்டில்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, அவற்றை 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் இவரது வீட்டைத் தேடி வந்து அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு விடுமுறையில் கொழிக்கும் கள்ளச்சந்தை

இன்று (அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம்) அரசு விடுமுறை தினம் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் (டாஸ்மாக்) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சேகர் தனது சட்டவிரோத விற்பனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.

இன்று காலை முதலே சேகர் வீட்டில் மதுபானம் வாங்குவதற்காகக் குடிமகன்கள் திரண்டிருந்தனர். காரைக்கால் பகுதியில் இருந்து லாரிகள் மூலமாக மொத்தமாக வாங்கிக் கொண்டுவரப்பட்ட பீர் மற்றும் பல்வேறு வகையான உயர் ரக மதுபானங்களை, சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அதிக விலைக்குப் படுஜோராக விற்பனை செய்து வந்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ

இந்தச் சட்டவிரோத மது விற்பனை குறித்து யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சேகரின் வீட்டின் வெளியே மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவற்றை சேகரின் குடும்பத்தினர் கணக்குப் பார்த்து விற்பனை செய்வதும் தெளிவாகத் தெரிகிறது.

வீடியோவில் மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, மதுபானம் வாங்க வந்த ஒரு நபரிடம் சேகர் பேசுவதும் பதிவாகியுள்ளது. அந்த உரையாடலில், "ஒன்பதரை மணிக்கு ரவுண்ட்ஸ் வருவார்கள் ஒன்பதரை மணிக்குள்ள பாத்து வாங்கிக்கோங்க, என்று அந்தச் சாராய வியாபாரி சர்வ சாதாரணமாகப் பேசுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி, இந்தச் சட்டவிரோத விற்பனை எந்தவித அச்சமும் இல்லாமல், தொடர்ந்து பகிரங்கமாக நடைபெற்று வருகிறது என்பதைக் காட்டுகிறது.

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

காந்தி ஜெயந்தி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில், ஒரு கிராமத்தின் மையத்திலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதும், அது சமூக வலைதளங்களில் பரவுவதும், காவல்துறையின் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சட்டவிரோத மது விற்பனையால் இளைஞர்கள் சீரழிவதும், குடும்பங்களில் அமைதி குலைவதும் வாடிக்கையாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெளிமாநில மது விற்பனையால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஒருபுறம் என்றால், சமூகத்தின் ஒழுக்கம் சீர்குலைவது மறுபுறம் உள்ளது.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை உடனடியாகத் தலையிட்டு, வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடத்தி வரப்பட்ட வெளிமாநில மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Ola S1 Pro: சிங்கிள் சார்ஜில் 320 கிலோமீட்டர் மைலேஜ்.. Ola S1 Pro விலை, தரமும் எப்படி?
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Embed widget