மேலும் அறிய

Book Fair 2025:  கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக விற்பனையான புத்தகங்கள் - எங்கே தெரியுமா?

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டை காட்டிலும் 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இந்தாண்டு 70 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.

3வது புத்தகத் திருவிழா 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3 வது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்; மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் இணைந்து நடத்திய 3 வது புத்தகத் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த புத்தகத்திருவிழாவை கடந்த மாதம் ஜனவரி 31ம் தேதி இரவு பிற்படுத்தப்பட்டேர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 10 நாட்களாக நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில் பிரபல வாய்ந்த சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது. 


Book Fair 2025:  கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக விற்பனையான புத்தகங்கள் - எங்கே தெரியுமா?

விற்பனையில் சாதனை 

இந்தாண்டு நடைபெற்ற இந்த புத்தகத்திற்கு விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவை விட அதிகளவில் விற்பனை நடைபெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ரூபாய் 37 லட்சத்து 71 ஆயிரத்து 500 மதிப்பிலான 18,972 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் 68 லட்சத்து 34 ஆயிரத்து 923 ரூபாய் மதிப்பிலான 64,726 புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. மேலும் 70 ஆயிரம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். 

வெறிச்சோடி காணப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காரணம் இதுதான்..!


Book Fair 2025:  கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக விற்பனையான புத்தகங்கள் - எங்கே தெரியுமா?

சிறப்பாக செயல்பட்ட துறைகள் 

இப்புத்தகத் திருவிழாவில் புத்தக அரங்குகள் 66, அரசு திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் 8 என மொத்தம் 74 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறைகளின் முயற்சியால் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி ஆணையர்கள் (மயிலாடுதுறை,சீர்காழி), பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பகழக முதுநிலை மண்டல மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலாகள், பத்திர பதிவுத்துறை, உதவி ஆணையர் கலால், மகளிர் திட்டம் ஆகிய துறைகள் இப்புத்தகத்திருவிழாவை சிறப்பாக நடத்த முழுவதுமாக செயல்பட்டுள்ளனர்.


Book Fair 2025:  கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக விற்பனையான புத்தகங்கள் - எங்கே தெரியுமா?

2200 மாணவர்கள் விலையில்லா புத்தகங்கள் 

மேலும் வர்த்தக சங்கம் சார்பில் 1200 மாணவர்களுக்கும், 800 மாணவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 200 மாணவர்களுக்கும் என மொத்தம் 2200 அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விலையின்றி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞர்கள்,பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை அதிகப்படுத்த இப்புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகவே மாவட்ட நிர்வாகமும் இதனை ஈடுப்பாட்டுடன் நடத்தியது. இவை அனைத்தும் மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே செய்ய முடிந்தது என புத்தகத் திருவிழா இறுதிநாளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

CSK Practice : சேப்பாக்கத்தில் தோனியை பார்க்க முடியாது.. பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி! சோகத்தில் ரசிகர்கள்

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலரவிக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget