மேலும் அறிய

Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் சீர்காழி அருகே 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னம், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் மாதம்

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புயலுக்கான அடையாளமாக காற்றழுத்த மையம் உருவாகியிருந்தது. கடந்த ஒரு வார காலமாக இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இது இப்போது வட தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து சில மணி நேரங்களில் இது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.


Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

இந்த சூழலில் நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி புயல் சின்னம் நகரக்கூடும். அதன் பிறகு, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே வரும் நவம்பர் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.


Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது. 


Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

மழை பொழிவு மாவட்டங்கள் 

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் 

இந்நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையில் வடிகால் வசதி இல்லாமலும், கடல் நீர் உட்புகுந்தும் சம்பா சாகுபடி பயிர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழை நீரால் 300 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்து வருகிறது.


Rain Update: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் வயல்வெளி - மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் நெற்பயிர்

தொடர்ந்து புறக்கணிப்பு 

மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சம்பா சாகுபடி பயிர்கள் முற்றிலும் அழிந்து விடும் எனவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்தாலும் ஆண்டு தோறும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி பயிர்கள் அழுகி பாழாவதால் இரண்டு முறை விவசாயம் செய்ய நேரிடுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இந்த பகுதியின் பிரதான வடிகாலான செல்வனாறு கரையை பலப்படுத்தி, கடல் நீர் உட்புகாமல் ஆற்றின் முகத் துவாரத்தில் கதவணை அமைத்து தரவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உரிய கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
எச் ராஜாவையெல்லாம் கண்டுக்கவே கூடாது... தமிழக அரசியலில் அவர் ஒரு சாபக்கேடு- விளாசிய சேகர்பாபு
Embed widget