மேலும் அறிய

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

இலங்கை கடற்படையினராகல் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது உறவினர்களை சந்தித்து தவெகவினர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை மீட்கப்படும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் அறிவித்து பூம்புகார் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில் அவர்களை சந்தித்து தவெகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொடரும் மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களை அடித்து துன்புறுத்துவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இலங்கை கடற்படையின் அட்டூழியம் இன்றளவும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் நான்கு பைபர் படகுகளில் கடந்த 20 -ஆம் தேதி இரவு 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பூம்புகார் துறைமுகத்தில் இருந்து சென்ற இவர்கள் நேற்று முன்தினம் காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் மாலை வரை மீனவர்கள் யாரும் கரைதிரும்பவில்லை. மேலும் மீனவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததாலும் மீனவ கிராமங்களில் அச்சம் ஏற்பட்டது.


சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

கைதான மீனவர்கள் 

இந்நிலையில் நேற்று இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர் சம்பவம் குறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுகளில் இருந்த மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் சந்திரபாடி கிராமத்தை சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்டை கைது செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

தப்பிய 6 மீனவர்கள் 

இந்நிலையில் எஞ்சிய இரண்டு பைபர் படகுகளில் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையில் சிக்காமல் தப்பி இன்று காலை பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில்; இந்திய கடற்பரப்பிலேயே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கே இலங்கை மீனவரின் உடல் மிதந்துள்ளது. இதுகுறித்து வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்தோம். அப்போது எங்களை இலங்கை மீனவர்கள் தொடர்பு கொண்டு அது தங்கள் மீனவரின் உடல் எனவும், ஆகையால் நாங்கள் இன்னும் சற்று நேரத்தில் அங்கு வந்து விடுவோம், அதுவரை உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி சற்று நேரத்தில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இறந்த சக மீனவரின் சடத்தை மீட்டனர். அப்போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படை பூம்புகார் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி 1 விசை படகு மற்றும் 2 பைபர் படகுடன் சக மீனவர்களை கைது செய்தனர். இதனை பார்த்து துரிதமாக படகை திருப்பி அங்கிருந்து இரண்டு படகுகளில் இருந்த தாங்கள் 6 பேர் தப்பித்தோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.


சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மற்றும் மீனவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளையும், படகையும் பாதுகாப்பாக மீட்டுதர வேண்டும் என கண்ணீர்மல்க மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத் தரும் வரை பூம்புகார் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போவதாக கூறி போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நேற்று தொடங்கிய போராட்டமானது இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக 75 விசைப்படகு 500 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்த தவெகவினர்

தவெகவினர் ஆறுதல் 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பூம்புகார் துறைமுகத்தில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து சம்பவம் குறித்தும் மீவர்களின் கோரிக்கை குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், தங்கள் தலைமையின் உத்தரவின் பேரில் மீனவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு, தமிழக வெற்றிக் கழகம் மீனவர்களுக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்க்கும் எனவும், தங்கள் தலைவர் மூலமாக மீனவர்கள் கோரிக்கை குறித்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவோம் எனவும் உறுதியளித்து சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget