மேலும் அறிய

கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 30 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கனாம்பட்டு கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் கணவர்; பூட்டிய வீட்டில் கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்ட வீடு மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தஸ்லீம் என்பவருக்குச் சொந்தமானது. தஸ்லீம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி ஜாஸ்மின் (32), தாய் ஜலிபாபீவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தின்போது, ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு, ஜாஸ்மின் குழந்தைகளுடன் அருகில் உள்ள அவரது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அதேபோல, இவர்களது வீட்டின் மாடியில் வாடகைக்குக் குடியிருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரான சுதா என்பவரும், தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால், வீடு முற்றிலுமாகப் பூட்டப்பட்டு ஆள் அரவமற்று இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

திட்டமிட்ட துணிகரச் செயல்

இந்நிலையில் இன்று ஜாஸ்மின் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே ஏதோ விபரீதம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உள்ளே சென்று பார்த்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த நான்கு பீரோக்களும் உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோக்களைச் சோதனையிட்டபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60,000 ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும்.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மாடி வீடு வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் 

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தீவிரமாக ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் கையாண்ட வழிமுறை காவல்துறையினரையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. கொள்ளையர்கள், முதலில் பூட்டப்பட்டிருந்த மாடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மாடி வீட்டில் அவர்களுக்குத் திருடுவதற்குத் தகுந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், மாடி வீட்டில் உள்ளே இருக்கும் படிக்கட்டு வழி வழியாகக் கீழ்த் தளத்தில் உள்ள ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதன் மூலம், பிரதான கதவை உடைக்காமல், மாடி வழியாக உள்ளே நுழைந்து, கீழ்த் தளத்தில் இருந்த நான்கு பீரோக்களையும் உடைத்துத் துணிகரமான முறையில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் இந்த வீட்டின் அமைப்பை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது நீண்ட நாட்களாக நோட்டமிட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

விரைந்து வந்த காவல்துறை: தீவிர விசாரணை

ஜாஸ்மின் உடனடியாக இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக மாங்கனாம்பட்டு கிராமத்திற்கு விரைந்தது. ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், கொள்ளையர்கள் மாடியில் இருந்து கீழ்த் தளத்திற்குக் கடந்து சென்ற வழிமுறைகளையும் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. "திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்கவும், கொள்ளையர்களை விரைந்து பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மக்களிடையே அச்சம்

மாங்கனாம்பட்டு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, அதுவும் மாடி வழியாகப் புகுந்து, நான்கு பீரோக்களை உடைத்து இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிச் செல்லும்போது, காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget