மேலும் அறிய

கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 30 சவரன் தங்க நகைகள், 60 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கனாம்பட்டு கிராமத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் கணவர்; பூட்டிய வீட்டில் கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்ட வீடு மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தஸ்லீம் என்பவருக்குச் சொந்தமானது. தஸ்லீம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி ஜாஸ்மின் (32), தாய் ஜலிபாபீவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தின்போது, ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இரண்டு தினங்களுக்கு முன்பு, ஜாஸ்மின் குழந்தைகளுடன் அருகில் உள்ள அவரது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். அதேபோல, இவர்களது வீட்டின் மாடியில் வாடகைக்குக் குடியிருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரான சுதா என்பவரும், தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்ததால், வீடு முற்றிலுமாகப் பூட்டப்பட்டு ஆள் அரவமற்று இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

திட்டமிட்ட துணிகரச் செயல்

இந்நிலையில் இன்று ஜாஸ்மின் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தாலும், உள்ளே ஏதோ விபரீதம் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. உள்ளே சென்று பார்த்தபோதுதான் கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த நான்கு பீரோக்களும் உடைக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. பீரோக்களைச் சோதனையிட்டபோது, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 60,000 ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும்.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மாடி வீடு வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் 

இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தீவிரமாக ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் கையாண்ட வழிமுறை காவல்துறையினரையும், பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. கொள்ளையர்கள், முதலில் பூட்டப்பட்டிருந்த மாடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மாடி வீட்டில் அவர்களுக்குத் திருடுவதற்குத் தகுந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல், மாடி வீட்டில் உள்ளே இருக்கும் படிக்கட்டு வழி வழியாகக் கீழ்த் தளத்தில் உள்ள ஜாஸ்மின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதன் மூலம், பிரதான கதவை உடைக்காமல், மாடி வழியாக உள்ளே நுழைந்து, கீழ்த் தளத்தில் இருந்த நான்கு பீரோக்களையும் உடைத்துத் துணிகரமான முறையில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் இந்த வீட்டின் அமைப்பை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது நீண்ட நாட்களாக நோட்டமிட்டிருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

விரைந்து வந்த காவல்துறை: தீவிர விசாரணை

ஜாஸ்மின் உடனடியாக இந்தத் துணிகரக் கொள்ளை குறித்து ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக மாங்கனாம்பட்டு கிராமத்திற்கு விரைந்தது. ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், கொள்ளையர்கள் மாடியில் இருந்து கீழ்த் தளத்திற்குக் கடந்து சென்ற வழிமுறைகளையும் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் ஏதேனும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. "திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்கவும், கொள்ளையர்களை விரைந்து பிடிக்கவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


கொள்ளிடம் அருகே துணிகரம்! வீட்டில் 30 சவரன் நகை, பணம் கொள்ளை: மாடி வழி நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை!

மக்களிடையே அச்சம்

மாங்கனாம்பட்டு பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, அதுவும் மாடி வழியாகப் புகுந்து, நான்கு பீரோக்களை உடைத்து இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிச் செல்லும்போது, காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget