மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் - ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1 தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர்

கிராம சபை கூட்டங்கள் வருடத்தில் 4 முறை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2022 -ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் ஜனவரி.26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர்.2 காந்தி பிறந்த தினம் ஆகிய நாட்களுடன் கூடுதலாக மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவம்பர் .1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1, 2025 அன்று, மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே 1, 2025 அன்று, மாவட்டத்தின் 241 கிராம ஊராட்சிகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம ஊராட்சிகளின் நிர்வாக செயல்பாடுகள், பொதுநிதி செலவினங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள், மறுப்புகள் குறித்தும் விரிவாக இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட இருக்கின்றது.

விவாத பொருள் 

இக்கிராம சபை கூட்டங்கள், ஊராட்சி நிர்வாகத்தின் பொது நிதி செலவினங்கள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன. மேலும், கிராம நிலப்பிரிவுகள் மற்றும் கட்டட அனுமதிகள் தொடர்பாகவும், இணையவழி மூலம் மனுப்பதிவுகள் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கூட்டங்களில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இணையவழி சேவைகளுக்கு முக்கியத்துவம் 

தற்போது, அரசு புதிய முறையில், இணையவழி சேவைகள் மூலம் மனைப் பிரிப்பு மற்றும் கட்டட அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இதன்படி, சுய சான்றிதழ்கள் (Self Certification) அடிப்படையில் கட்டிட அனுமதிகளைப் பெற முடியும். இதனால் பொதுமக்கள் அங்கங்குச் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லாமல் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடிகிறது. இந்த நவீன முறைகள் குறித்து கிராம சபையில் விவாதித்து, பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட உள்ளது.

கிராம ஊராட்சிகளில் வசூலிக்கப்படும் வரிகள், வரியில்லா வருவாய்கள் ஆகியவற்றையும் இணையவழி (online payment) மூலம் செலுத்தும் வசதி தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பற்றி பொதுமக்களுக்கு முழுமையாக அறிவுறுத்தி, அனைவரும் பயன்படுத்த முனைவேண்டும் என்பதற்காகவும் இந்தக் கூட்டங்களில் உரையாடல் நடைபெறவிருக்கிறது. இதன் மூலம் ஊராட்சிகளின் வருமானத்தை நேர்மையாகக் கண்காணிக்க முடியும்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு அவசியம்

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் (ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள்) தங்களது ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள், குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்ற நலத்திட்டப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உத்தரவு 

கிராம சபையில் விவாதிக்கப்படும் விஷயங்களுக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள, ஊராட்சிகளுடன் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும், பொதுப்பணித் துறை, குடிநீர் வாரியம், மின்வாரியம், ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்டவை கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அறிவுறுத்தியுள்ளார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Top 10 News Headlines: திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
திருப்பரங்குன்றம்-அதிரடி தீர்ப்பு, சென்னையில் பாரத் டேக்ஸி, வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் - 11 மணி செய்திகள்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: எகிறிய தங்கம் விலை, எடப்பாடி கொடுத்த வாக்குறுதி, திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
Embed widget