மேலும் அறிய

தொடரும் நாய்க்கடி சம்பவம்; அதிர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர்கள்

சீர்காழி அருகே மேலும் இரண்டு குழந்தைகளை தெருநாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சீர்காழியை அடுத்து மங்கைமடம் கிராமத்தில் தெருவில் விளையாடிய இரண்டு சிறுவர்களை தெருநாய் கடித்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் நாய்கடி சம்பவங்கள் 

சமீப காலமாக நாய்கடித்ததாக செய்திகள் பரவலாக வந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமியர் அதிகளவில் இந்த நாய்கடிக்கு ஆளாகுவதும், அதற்கு தெருநாய்கள் மற்றும் இன்றி வீடுகளில் வளர்க்கப்படும் பல்வேறு இன நாய்களும் கடிப்பதில் விதிவிலக்கு இன்றி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். தற்போது கூட இந்த செய்தியினை  படித்துக்கொண்டிருக்கும்போது கூட தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு குழந்தைகள், முதியவரைகள், பாதசாரிகள், சைக்களில், பைக் என சென்று கொண்டிருப்பவரை தெரு நாய் ஒன்று துரத்திக் கொண்டிருக்கும். 


தொடரும் நாய்க்கடி சம்பவம்; அதிர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர்கள்

நாய்கடியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு 

சா்வதேச அளவில் இந்தியாவும், இந்திய அளவில் தமிழகமும் தெரு நாய்களின் எண்ணிக்கையிலும், விஷக்கடியிலும் முதன்மை வகிக்கின்ளது. உலக வல்லரசாக வேண்டும் என்கிற கனவில் மிதக்கும் ஒரு தேசம், கட்டுப்பாடில்லாமல் வீதிகளில் தெரு நாய்கள் திரியும் தேசமாக இருக்க முடியாது, கூடாது. கணக்கில் அடங்காத அளவிலான தெரு நாய்களின் தேசமாக இந்தியா மாறியிருக்கிறது. விஞ்ஞான ரீதியான அணுகுமுறை இல்லாமல் இதற்கு விடை காண்பது எளிதல்ல. உலக சுகாதார நிறுவனத்தின் உத்தேசப்படி, இந்தியாவில் ஆறு கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள் காணப்படுகின்றன. உலகில் நிகழும் ‘ரேபீஸ்’ எனப்படும் வெறிநாய்க் கடி உயிரிழப்பில் 36 சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. அதைவிட வேதனையான விஷயம், வெறிநாய்க் கடியால் உயிரிழப்பவா்களில் 30 இருந்து - 60 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகும்.
சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகளில் நாள்தோறும் குறைந்தது 30 பேராவது நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  


தொடரும் நாய்க்கடி சம்பவம்; அதிர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர்கள்

கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் வேண்டும் 

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்திருக்கும் புள்ளிவிவரத்தின் படி, தமிழ்நாடில் மட்டும் தெரு நாய்க்கடியால் இந்தாண்டு 4.4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 27.59 லட்சம் போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். முறையான தடுப்பூசி, கருத்தடை, தத்தெடுக்கும் வசதி, குட்டிகளை தெருவில் விடுவதற்குத் தடை போன்றவற்றின் மூலம் தெரு நாய் பிரச்னையை எதிா்கொள்ள முடியும். அதற்கு முனைப்பும், தீவிரமான நடவடிக்கையும் அவசியம். ஒருசில நாய்களுக்கு தடுப்பூசி போடுவதாலும், கருத்தடை செய்வதாலும் பிரச்னைக்குத் தீா்வு காண முடியாது. தெருவோரக் கடைகளும், முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதும் தொடரும் வரை நாய்க்கடி பிரச்னையும் தொடரும்.


தொடரும் நாய்க்கடி சம்பவம்; அதிர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட பெற்றோர்கள்

சீர்காழி அருகே சிறுவர்களை கடித்து வரும் தெரு நாய்கள்

இந்நிலையில் தான் சமீபத்திய சென்னையில் ஒரு சிறுமியை வளர்ப்பு நாய் கொடுரமாக தாக்கி கடித்ததில் ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்நிகழ்வு பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த சூழலில் தான் தற்போது அதேபோன்று சம்பவம் தொடர்ந்து மயிலாடுதுறையில் மாவட்டம் சீர்காழி அருகே நடந்தேறி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளி. ஞானசேகரன் அவரது மனைவி தமிழரசி கடந்த புதன்கிழமை அன்று முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்பொழுது அவரது மகன் அருகில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது அவ்வழியே வந்த தெருநாய் ஒன்று சிறுவனை கடித்துள்ளது. அதனை அடுத்து சிறுவனின் அலறல் கேட்டு ஓடி வந்த ஞானசேகரன் குழந்தையை மீட்டுள்ளார். இதில் சிறுவனுக்கு வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைகாக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு மகனை சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. 

நாய்கடிக்கு ஆளான மேலும் இரண்டு சிறுவர்கள்

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீளாத சூழல் அதே கிராமத்திற்கு அருகே மங்கைமடம் என்ற பகுதியில் இன்று மீண்டும் தெரு நாய் கடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அடுத்த மங்கைமடம் பகுதியில் 8 வயது சிறுவன் தர்ஷன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய் கடித்துள்ளது. மேலும் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த தர்ஷார்த்  என்ற நான்கரை வயது சிறுவனையும் கடித்துள்ளது. இதனால் படுகாயபனம் அடைந்த இரண்டு சிறுவர்களும் தற்போது சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சீர்காழி அருகே தொடர்ந்து குழந்தைகள் நாய் கடிக்கு ஆளாகும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
மழையில் தப்பி நெற்பயிர்கள், அதிகாரிகளால் பாழாகும் அவலம்... தீடீரென மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை...
மழையில் தப்பி நெற்பயிர்கள், அதிகாரிகளால் பாழாகும் அவலம்... தீடீரென மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை...
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி உயிரிழப்பு - மயிலாடுதுறை பேருந்து நிலைய மாற்றமே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டு..!
திருஇந்தளூர் பங்குனி உத்திரப் பெருவிழா: தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்!
தங்க ரத்தின அங்கியில் பரிமள ரங்கநாதர் தரிசனம்: திவ்ய தேசங்களில் ஒன்றான திருஇந்தளூரில் கோலாகலமான திருவிழா ஆரம்பம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Candidate List Released : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
Kamal Hassan:
Kamal Hassan: "நீங்க மட்டும் எம்பி ஆனா போதுமா..?" கமல் மீது கடுப்பில் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள்!
Top 10 News Headlines: கூட்டணி கட்சிகளை அழைத்த திமுக, மீண்டும் எகிறிய தங்கம் விலை, 15 அம்ச திட்டத்துடன் அமெரிக்கா - 11 மணி செய்திகள்
கூட்டணி கட்சிகளை அழைத்த திமுக, மீண்டும் எகிறிய தங்கம் விலை, 15 அம்ச திட்டத்துடன் அமெரிக்கா - 11 மணி செய்திகள்
தமாகாவிற்கு 5 தொகுதி... அத்தனையும் திமுக கோட்டை.!! தாக்குப்பிடிப்பாரா ஜி.கே.வாசன்.?
தமாகாவிற்கு 5 தொகுதி... அத்தனையும் திமுக கோட்டை.!! தாக்குப்பிடிப்பாரா ஜி.கே.வாசன்.?
DMK Alliance: 2021 Vs 2026 - கறாராக பேசி வேலையை முடித்த திமுக - ஆனாலும் நட்டம், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன்?
DMK Alliance: 2021 Vs 2026 - கறாராக பேசி வேலையை முடித்த திமுக - ஆனாலும் நட்டம், எத்தனை தொகுதிகளில் உதயசூரியன்?
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Thirumavalavan: கமலால் கடுப்பான விசிக தொண்டர்கள்..! நள்ளிரவில் நன்றி சொல்லி திருமா போஸ்ட் - என்ன ஆச்சு?
Skoda Discounts: ரூ.5 லட்சம் ஆஃபர் கொடுக்குறோம் - கார் வாங்க வரிங்களா? லிஸ்டில் கைலக், குஷக், ஸ்லாவியா
Skoda Discounts: ரூ.5 லட்சம் ஆஃபர் கொடுக்குறோம் - கார் வாங்க வரிங்களா? லிஸ்டில் கைலக், குஷக், ஸ்லாவியா
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
Sonia Gandhi: சோனியா காந்தி நள்ளிரவில் மருத்துவமனையில் திடீர் அனுமதி! என்னாச்சு?
Embed widget