மேலும் அறிய

6000 மது பாட்டில்களுடன் மூதாட்டி கைது! அதிரடி காட்டிய காவல்துறை, பொதுமக்கள் அதிர்ச்சி!

மயிலாடுதுறை அருகே சட்டவிரோதமாக புதுச்சேரி மதுபானம் விற்பனை செய்து வந்த மூதாட்டியியை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 6000 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள எழுமகளூர் கிராமத்தில், சட்டவிரோதமாகப் பாண்டிச்சேரி மதுபானங்களை விற்பனை செய்து வந்த ஒரு மூதாட்டி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 6000 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி மது வேட்டை, சட்டவிரோத மதுபான விற்பனைக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மது வேட்டையின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முழுவதும் சிறப்பு மது வேட்டை நடத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், மயிலாடுதுறை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜிக்கு எழுமகளூர் பகுதியில் சட்டவிரோதமாகப் பாண்டிச்சேரி மது விற்பனை நடைபெறுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மயிலாடுதுறை உட்கோட்டக் காவல்துறையினர் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எழுமகளூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

63 வயது மூதாட்டி கைது

காவல்துறையின் சோதனையில், எழுமகளூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மனைவி 63 வயதான விஜயலட்சுமி என்ற மூதாட்டி, தன் வீட்டில் சட்டவிரோதமாகப் பாண்டிச்சேரி சாராய விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூதாட்டி விஜயலட்சுமியிடம் இருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 6000 பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மாவட்டத்தில் நடந்த சமீபகாலப் பறிமுதல்களில் மிகப்பெரிய ஒன்றாகும்.

போலீசார் பதிவு செய்த வழக்கு

விஜயலட்சுமி மீது பாலையூர் காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையை முடித்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம், கடலோர மாவட்டங்களில் பாண்டிச்சேரி மதுபானங்கள் எளிதாகக் கிடைப்பதையும், அவற்றின் சட்டவிரோத விற்பனை தொடர்ந்து நடந்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வயதான பெண்கள்கூட இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவது, சமூகத்தின் சீர்கேட்டைப் பிரதிபலிக்கிறது.

காவல்துறையின் கடும் எச்சரிக்கை

இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், “சட்டவிரோதமாக மதுவிலக்குக் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வமான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை தயங்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்கக் காவல்துறையின் முயற்சி மட்டும் போதாது, பொதுமக்கள் ஆதரவும் அவசியம் என்பதை வலியுறுத்திய காவல்துறை கண்காணிப்பாளர், “சட்டவிரோத மதுபான விற்பனை குறித்துப் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, இலவச உதவி எண்களான 10581 மற்றும் 8870490380 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்” என்று கேட்டுக்கொண்டார். இந்த அதிரடி நடவடிக்கை, குத்தாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு ஒரு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறிய கிராமப் பகுதிகளில் இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் நடப்பதைக் கண்டறிந்து தடுப்பது காவல்துறைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, மாவட்டத்தில் இதுபோன்ற மது வேட்டைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம் ஓவர்.. ஒவ்வொரு அணியும் எந்த வீரரை? எவ்வளவு கொடுத்து எடுத்தது? - 10 டீம்களின் லிஸ்ட்
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
Narendra Modi: இந்தியாவுக்கு பெருமை.. எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி!
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
IPL 2026 Squads: ஏலம் முடிந்தது..! 10 அணிகளின் மொத்த வீரர்கள் பட்டியல் - இது தான் ப்ளேயிங் லெவனா? யார் மாஸ்?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்! வெற்றி பெறுமா ? அன்புமணியின் திட்டம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் போராட்டம்! வெற்றி பெறுமா அன்புமணியின் திட்டம்?
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Embed widget