மேலும் அறிய

Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு; 10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்பவரின் மகன் 40 வயதான கலைவாணன். இவர்மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

துண்டான விரல்கள்:

பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தற்போது  தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு;  10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

போலீஸ் விசாரணை:

மேலும் இது குறித்து நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சூழலில் தற்போது கலைவாணன் வீட்டின் அருகில் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பட்டைகளை கட்டி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அகிலன், திருவாரூர் மாவட்டத்திலிருந்து முகிலன் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. கலைவாணன் வீட்டு வாசலில் இறக்கி விடப்பட்ட இரண்டு நாய்களும் சிறிது தூரம் ஓடி அவருடைய வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கிரவுண்டில் உள்ள குப்பைமேட்டின் அருகில் சென்று நின்று விட்டன.

Speaker Appavu: ஏழை எளிய மக்களை தாங்கி பிடிக்கின்ற பண்புள்ள முதல்வர் நம் முதல்வர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு;  10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?


இச்சம்பவம் குறித்து போலீசார்  தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் தன் மீது நாட்டுவெடிகுண்டை வீசி சென்றதாக கலைவாணன் வாக்கு மூலம் அளித்துள்ளார். தன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது காவல்துறையினருக்கு தெரிந்துவிட கூடாது என இதுபோன்று கூறியுள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலைவாணன் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து, கைவிரல்கள் துண்டானது தெரியவந்திருக்கிறது.

Mothers day: நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது.... அன்னையர் தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


Crime: வீட்டிலே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு;  10 விரல்களையும் பறிகொடுத்த பிரபல ரவுடி - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு கலைவாணன் வெடிகுண்டு தயாரித்திருக்கலாம் என்றும், இந்த ரகசிய திட்டம் வெடிகுண்டு வெடித்ததால் வெளியே தெரிந்துவிட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

கொலை செய்ய சதித்திட்டம்:

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில்,  இவர் 60 நாட்டு வெடிகளை வாங்கி அதில் இருந்த மருந்தை வெளியே எடுத்து பால்ரஸ், ஆணி உள்ளிட்டப் பொருட்களை அடைத்து வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார். அப்போது 2 குண்டுகளை செய்து முடித்துவிட்டு 3 வது குண்டு தயாரிக்கும்போது வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே தயாரித்த 2 வெடிகுண்டுகளை அவரது மனைவியிடம் இருந்து கைப்பற்றி, அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளோம். யாரை கொலை செய்ய வெடிகுண்டுகளை செய்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Namakkal: வெல்ல ஆலை குடிசைகளுக்கு தீ வைப்பு.. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLANArun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண்  பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
3டி தொழில்நுட்பத்துடன் போட்டியிடும் கைவினை களிமண் பொம்மைகள்- மயிலாடுதுறையில் கலக்கும் இளைஞர்....!
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
சாம்சங் நிறுவனத்திற்கு தொடரும் தலைவலி... குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
Crime: பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
அத்வானிக்கு கார் ஓட்டியவர் தான் மோடி! 75 வயாதாகியும் போய் பார்க்கவில்லை - சிவி சண்முகம் தாக்கு
Embed widget