மேலும் அறிய

கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மது போதையால் முதல் நாளிலே விபத்தில் உயிரிழந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குவது காரைக்குடி. காரைக்குடி அருகே அமைந்துள்ளது சாக்கோட்டை விளாிரகாடு கிராமமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். அவருக்கு வயது 23.  காத்தலிங்கம் சிற்பி ஆவார். இவர் பெங்களூரில் சிற்பி பணியை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் பெங்களூரிலே தங்கியிருந்த காத்தலிங்கம், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்று சொந்த ஊரான சாக்கோட்டை விளாரிகாட்டிற்கு வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பிய உற்சாகத்தில் நண்பர்களான அருண் மற்றும் கவிராஜை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பணம்பட்டி மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு மீண்டும் மதுவாங்க முயற்சித்தபோது அவர்களிடம் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.


கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இதையடுத்து, மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். பணம்பட்டி அருகே இருந்த புதுவயலில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வாகனத்தை சரியாக ஓட்ட முடியாமல் ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது, கருநாவல்குடி வளைவில் சென்றபோது அந்த இடத்தில் இருந்த பாலத்தில் மோதி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

அந்த விபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய காத்தலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார். அவரது நண்பர்களான அருண் மற்றும் கவிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த அருண் மற்றும் கவிராஜை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த காத்தலிங்கத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர்.


கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இந்த விபத்து தொடர்பாக சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய சிற்பி, ஊருக்கு வந்த முதல் நாளிலே மதுபோதையால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளான அவர், அதிலிந்து மீண்ட சந்தோஷத்தை கொண்டாடவும், ரிலாக்ஸ் செய்யவும் தான் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். ஆனால் முதல் நாளே அவரது முடிவு நாளாக மாற்றிவிட்டது மதுபோதை. நண்பர்கள் அடுத்தடுத்து கூடுதல் மது கேட்டதால், அதை வாங்குவதற்கா எடுத்த முயற்சியும், கட்டுப்பாடு இல்லாத சூழலும் தான் இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உறவினர்கள் இறந்த இளைஞரின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Embed widget