மேலும் அறிய

கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த இளைஞர், மது போதையால் முதல் நாளிலே விபத்தில் உயிரிழந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரமாக விளங்குவது காரைக்குடி. காரைக்குடி அருகே அமைந்துள்ளது சாக்கோட்டை விளாிரகாடு கிராமமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தலிங்கம். அவருக்கு வயது 23.  காத்தலிங்கம் சிற்பி ஆவார். இவர் பெங்களூரில் சிற்பி பணியை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக பேருந்துகள் இயக்கப்படாததால் பெங்களூரிலே தங்கியிருந்த காத்தலிங்கம், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்று சொந்த ஊரான சாக்கோட்டை விளாரிகாட்டிற்கு வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பிய உற்சாகத்தில் நண்பர்களான அருண் மற்றும் கவிராஜை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பணம்பட்டி மதுபானக்கடைக்கு சென்றுள்ளனர். அங்கு மது அருந்திவிட்டு மீண்டும் மதுவாங்க முயற்சித்தபோது அவர்களிடம் பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.


கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இதையடுத்து, மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். பணம்பட்டி அருகே இருந்த புதுவயலில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். ஏற்கனவே மதுபோதையில் இருந்ததால் அவர்கள் வாகனத்தை சரியாக ஓட்ட முடியாமல் ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது, கருநாவல்குடி வளைவில் சென்றபோது அந்த இடத்தில் இருந்த பாலத்தில் மோதி மூன்று பேரும் கீழே விழுந்தனர்.

அந்த விபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய காத்தலிங்கம் சம்பவ இடத்திலே பலியானார். அவரது நண்பர்களான அருண் மற்றும் கவிராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்த அருண் மற்றும் கவிராஜை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த காத்தலிங்கத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்துள்ளனர்.


கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!

இந்த விபத்து தொடர்பாக சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய சிற்பி, ஊருக்கு வந்த முதல் நாளிலே மதுபோதையால் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடும் சிரமத்திற்கு உள்ளான அவர், அதிலிந்து மீண்ட சந்தோஷத்தை கொண்டாடவும், ரிலாக்ஸ் செய்யவும் தான் நண்பர்களுடன் மது அருந்த சென்றுள்ளார். ஆனால் முதல் நாளே அவரது முடிவு நாளாக மாற்றிவிட்டது மதுபோதை. நண்பர்கள் அடுத்தடுத்து கூடுதல் மது கேட்டதால், அதை வாங்குவதற்கா எடுத்த முயற்சியும், கட்டுப்பாடு இல்லாத சூழலும் தான் இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உறவினர்கள் இறந்த இளைஞரின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..!  பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Team Of The Year: இதுதான்யா டீமு..! பட்டாசான ஓபனிங், கடப்பாரை மிடில் ஆர்டர், ஃபயரான கேப்டன் - எதிர்க்க முடியுமா?
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
IPL 2025 Awards: யாருக்கு என்ன விருதுகள்?ஆரஞ்சு, ஊதா, MVP பரிசுகள், சாய் சுதர்ஷன் செய்த சம்பவம் - பரிசுத்தொகை
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
Tata Harrier EV: ஆத்தி..! ரூ.21.49 லட்சத்திற்கு வொர்த்தா? காருக்குள் ஒரு லாரி தொழில்நுட்ப அம்சங்கள், ஹாரியரில் டாடா புரட்சி
South Trains Traffic Change: தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
தென் மாவட்ட மக்களே.! ரயில் போக்குவரத்தில் மாற்றம் - விவரத்த தெரிஞ்சுக்கிட்டு பிளான் பண்ணுங்க
Embed widget