மேலும் அறிய

குடும்ப கட்டுப்பாடு செய்தும், மீண்டும் கருவுற்ற பெண் - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தும், மீண்டும் கருவுற்றதால், இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " மனுதாரர் கடந்த 2017 ஆகஸ்டில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் 2020 ஆம் ஆண்டு கருவுற்ற நிலையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மனுதாரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் தற்பொழுது மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுக்க நேர்ந்ததாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அரசு தரப்பில் இதுபோல குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தவறுகள் நிகழும் பொழுது 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மனுதாரருக்கு அத்தொகை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கை பொருத்தவரை, "கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு 100% உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பல பெண்கள் கருவுற்று குழந்தை பெற்றெடுக்கின்றனர். மனுதாரர் கருவுற்றதை அறிந்ததும் தொடக்க காலத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அதனை தேர்வு செய்யவில்லை. ஆகவே மனுதாரர் அதற்கான இழப்பீட்டை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் ஒட்டுமொத்த சூழ்நிலையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

சமூக காடுகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நெடுமரம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கான 2018-ல் விடப்பட்ட ஏலத்தை நீடிக்காமல் புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கில்,சென்னை முதன்மை வன பாதுகாவலர்,  சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை  திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை  அகற்றுவதற்கு  கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 26 ஏலம் எடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதே நபருக்கு ஆண்டு தோறும் ஏலத்தை நீடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏலம் விடாமல் பழைய நபருக்கே நீடிப்பது ஏல ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு விடப்பட்ட ஏலத்தை 3.6.2022 அன்று மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு வெளிப்படையான ஏல நடைமுறைகளை பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கத்திற்காக ஏலத்தை நீட்டித்து வழங்குவது சட்டவிரோதம். எனவே, சமூக காடுகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நெடு மரம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கான 2018-ல் விடப்பட்ட ஏலத்தை நீடிக்காமல் புதிய ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி, நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து சென்னை முதன்மை வன பாதுகாவலர்,  சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget