மேலும் அறிய

குடும்ப கட்டுப்பாடு செய்தும், மீண்டும் கருவுற்ற பெண் - இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உத்தரவு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தும், மீண்டும் கருவுற்றதால், இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வள்ளி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 10 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " மனுதாரர் கடந்த 2017 ஆகஸ்டில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் 2020 ஆம் ஆண்டு கருவுற்ற நிலையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மனுதாரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால் தற்பொழுது மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுக்க நேர்ந்ததாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

அரசு தரப்பில் இதுபோல குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் தவறுகள் நிகழும் பொழுது 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். மனுதாரருக்கு அத்தொகை வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கை பொருத்தவரை, "கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு 100% உத்தரவாதம் வழங்கப்படுவதில்லை. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னரும் பல பெண்கள் கருவுற்று குழந்தை பெற்றெடுக்கின்றனர். மனுதாரர் கருவுற்றதை அறிந்ததும் தொடக்க காலத்திலேயே கருக்கலைப்பு செய்திருக்கலாம். ஆனால் மனுதாரர் அதனை தேர்வு செய்யவில்லை. ஆகவே மனுதாரர் அதற்கான இழப்பீட்டை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் ஒட்டுமொத்த சூழ்நிலையும் கருத்தில் கொண்டு மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, 8 வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

சமூக காடுகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நெடுமரம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கான 2018-ல் விடப்பட்ட ஏலத்தை நீடிக்காமல் புதிய ஏலம் நடத்த கோரிய வழக்கில்,சென்னை முதன்மை வன பாதுகாவலர்,  சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை  திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சமூக காடுகள் திட்டத்தின் கீழ் நெடுமரம் கண்மாயிலுள்ள சீமை கருவேல மரங்களை  அகற்றுவதற்கு  கடந்த 2018ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. ரூ.3 லட்சத்து 52 ஆயிரத்து 26 ஏலம் எடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அதே நபருக்கு ஆண்டு தோறும் ஏலத்தை நீடித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏலம் விடாமல் பழைய நபருக்கே நீடிப்பது ஏல ஒப்பந்த விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும், சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு விடப்பட்ட ஏலத்தை 3.6.2022 அன்று மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு வெளிப்படையான ஏல நடைமுறைகளை பின்பற்றாமல் அரசியல் உள்நோக்கத்திற்காக ஏலத்தை நீட்டித்து வழங்குவது சட்டவிரோதம். எனவே, சமூக காடுகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நெடு மரம் கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வெட்டுவதற்கான 2018-ல் விடப்பட்ட ஏலத்தை நீடிக்காமல் புதிய ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி, நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து சென்னை முதன்மை வன பாதுகாவலர்,  சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Embed widget