தொல். திருமாவளவன், ஓ. பன்னீர்செல்வம் இணைந்து பிரச்சாரம் – பெரியகுளத்தில் பானை சின்னத்திற்கு ஆதரவு
திருமாவளவன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் திமுக சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பானை சின்னத்தில் சக்திவேல் என்பவர் போட்டியிடுகிறார். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வருகை தந்த போது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து மலர் தூவி மாலை அணிவித்து சால்வை அணிவித்து அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். மேலும் திருமாவளவன் வரவேற்பதற்காக அங்கு கூடியிருந்த பெண்கள் பானையை தரையில் வைத்து கும்மி அடித்தும் திருமாவளவனுக்கு வரவேற்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் இணைந்து பெரியகுளத்தில் பானை சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர். இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பண்பானவர் உங்களில் ஒருவர் என கூறி அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சக்திவேலை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்தும் திமுக அரசு ஐந்தாண்டு செய்த சாதனைகளையும் எடுத்துரைத்து பானை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்ற கேட்டுக்கொண்டார். மேலும் சக்திவேல் வெற்றி பெற்றவுடன் தங்கள் பகுதியிலே தங்கி உங்களுக்கு தங்கி தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிவர்த்தி செய்து தருவார். மேலும் , தங்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் தருவார் என அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.






















