மேலும் அறிய

தேனியில் அதிர்ச்சி! பணத்திற்காக ஆண் குழந்தை விற்பனை - தந்தை கைது

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா அளித்த புகாரின் பேரில் தந்தை சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைது.

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பாண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாண்டீஸ்வரி சகோதரியான பரமேஸ்வரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சங்கர் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்  பரமேஸ்வரிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது . அப்போது மருத்துவமனையில் குழந்தையை விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சங்கரை அணுகியதாகவும் கூறப்பட்டது.

CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!


தேனியில் அதிர்ச்சி! பணத்திற்காக ஆண் குழந்தை விற்பனை - தந்தை கைது

குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தனது குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில் நேற்று  பரமேஸ்வரிக்கு தெரியாமல் குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து சைல்டு லைன் குழுவினருக்கு தகவல் கிடைக்கவே வீரபாண்டி காவல் நிலையத்தில் குழந்தையை விற்பனை செய்ததாக சங்கர் மீது புகார் அளித்தனர் . இதுகுறித்து வீரபாண்டி போலீசார் சங்கர் மற்றும் அவரது பரமேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

Nayanthara : ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட சிம்பு நயன்தாரா எக்ஸ் கணக்கு..குழப்பத்தில் ரசிகர்கள்


தேனியில் அதிர்ச்சி! பணத்திற்காக ஆண் குழந்தை விற்பனை - தந்தை கைது

மேலும் குழந்தையை  விற்பனை செய்யப்பட்டது உண்மைதானா? எவ்வளவு பணம் பெற்று குழந்தையை விற்கப்பட்டார் என்று சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மதுரையில் குழந்தை இருப்பதாக சங்கர் கூறியுள்ளார். ஆனால் குழந்தை அங்கு இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் குழந்தையை மீட்க சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


தேனியில் அதிர்ச்சி! பணத்திற்காக ஆண் குழந்தை விற்பனை - தந்தை கைது

அப்போது குழந்தை ஒரு லட்ச ருபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்த நிலையில் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா புகாரில் குழந்தையை விலைக்கு வாங்கிய போடிநாயக்கனூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) அவரது மனைவி உமாமகேஸ்வரி (36) மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் (44) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
வேங்கைவயல் வழக்கில் பட்டியல் இனத்தவர்கள் குற்றவாளிகளா? கொதித்தெழுந்த திருமா! அரசுக்கு முக்கிய கோரிக்கை!
ஐயப்ப பக்தர்களே... சபரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
ஐயப்ப பக்தர்களேச.. பரிமலையில் விரைவில் ரோப்கார் சேவை துவக்கம்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் -  திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
இன்ஸ்டா பழக்கத்தால் ஏமாந்த சென்னை பெண் - திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
சீமானிடம் போட்டோ கொடுத்ததே நான்தான் - ராஜீவ்காந்தி
Embed widget